காலம் பல கடந்த பின்னும்
நிகழ்வின் நினைவுகளை
ஒரு கனம் புறட்டிப்பார்கையில்
புன்னகையை புறம்தள்ளி
முந்திச் செல்கிறது
கண்ணீர் துளிகள்..!-
💙ரோமியோ ஜூலியட் காதலிற்கு எடுத்துக்காட்டாய் வாழும் இரு பறவைக... read more
சுயநலத்தோடு நீ பேசிய
ஆசை வார்த்தைகளோ
பொய்யாய் போன பின்பு
கருவிழியில் கண்ணீர் மட்டுமே மெய்யாய் வழிகிறது...!-
பேசுவதற்கு ஏதுமில்லை
என உணரும் போது
நீயா நானா என
முந்திச்செல்கிறது
கண்ணீர் துளிகள்...!-
சில விஷ்யங்களை
சிலரிடம் கேட்க வேண்டும்
எனத் தோன்றும் பின்பு
கேட்டாலும் கேட்கா விட்டாலும்
நடப்பது தான் நடக்கும் என
தெரிந்தபின் மனமும்
மௌனமாய் நகர்ந்துவிடும்..!
-
உன்னையும் உன்
உறவையும் வேண்டாம்
என்று தூக்கி எரிந்த
ஒருவரை நினைத்து
உனக்காகவும் உன்
உறவிற்காகவும் அன்று
முதல் இன்று வரை
காத்திருக்கும் ஒருவரை
அலட்சியப்படுத்தாதே...!
காலம் கடந்து நீ புரிந்து
கொள்ளும் சமயம் நீ
விரும்பியதும் அல்லாமல்
உன்னை விரும்பியதும்
இல்லாமல் வாழ்வில்
நீ அல்லல்படுவாய்....!-
உனக்காக நானும்
எனக்காக நீயும் மைவிரலால்
கவிவருடிய காதல் மடல்களை..
எதற்கென்று தெரியுமா?
உயிரெழுத்தென நீயும்
மெய்யெழுத்தென நானும்
இணைந்து படைத்த
உயிர்மெய்யெழுத்திடம்
இன்றைய காதல் பிணைப்பை
விட அன்றைய காதல் எத்துனை
அழகு என்று எடுத்துரைக்கத்தான்.!
-
தொலையாமல் இருப்பது
என்னோடு நீயும்
உன்னோடு நானும்
வாழ்ந்த நாட்களின்
நினைவுகள் மட்டுமே..!-
அறிந்தவராய் தொடர்ந்து
அதீத அன்பால் நனைந்து
பாசப்பினைப்பால் பிணைந்து
காலங்கள் பல கடந்து
காதல்கள் கடல் கடந்து
மனகசப்பும் அதனுடன் இணைந்து
பின் திரும்பி பார்கையில்
நீ யாரோ நான் யாரோ
எனதாகிவிடுகின்றனர்
உயிராய் உடன்வந்த சிலர்..!
-
அன்று நாம்
சந்தித்ததாலே ஏனோ
இன்று நினைத்தாலும்
சந்திக்க இயலா சந்தர்பத்திற்கு
தள்ளப்பட்டுவிட்டோம்...
விதி என்னும் விளையாட்டில்
நாமிருவர் மட்டும்
விதிவிலக்கா என்ன..?-
உரிமை என்பது நமக்கு
பிடித்தவர் மனதில் நாம்
பிடித்திருக்கும் இடத்தை
பொருத்தும் வகித்திருக்கும் உறவைப் பொருத்துமே தீர்மாணிக்கப்படுகிறது.!-