கவிதை கிருக்கன் 🖊️  
1 Followers · 3 Following

Joined 27 December 2023


Joined 27 December 2023

நான்...!

அனைத்தும் இருந்து
தனித்திருப்பது
ஆபத்து என்றால்
நான் மிக
ஆபத்தானவன்
மறவாதே...!

-



சில நேரங்களில்...!

தனிமை என்னை
சூழ்ந்து என் பிரச்சனைகளை
கேட்டு எனக்குள்ளே
பட்டிமன்றம்
நடத்தும் போது
அங்கேயும் ஒரு பிரச்சினை
நான் நடுவரா?
பங்கேற்பாளரா?


-



வழித்தடம்...!

உனக்கான பாதையை
உருவாக்கி அதில் நீ பயணிக்கும் போது
பக்குவம் என்ற நிழல் உன்னுடன்
பயணிக்குமானால்
வெற்றி உனதே...!

-



நீ வெற்றி பெறும்வரை மற்றவர்கள் பேசுவதை அமைதியாக கேள்...!
வெற்றிபெற்ற பிறகு பேசு
அவர்கள் கேட்பார்கள்...!
நீ எவ்வாறு வெற்றிபெற்றாய் என்பதை அல்ல...!
நீ எவ்வாறு
பொறுமையுடன் இருந்தாய் என்பதை...!

-



காதல் தோல்வி...!

படித்து முடிக்கப்படும்
முன்பே
மூடி வைக்கப்பட்ட
புத்தகம்
என்‌ காதல்...!

-



சொந்த வீடு...!

கனவுகளில்
பிரசவித்ததை
நினைவில்
பிரகாசமாக்க
அனுதினமும்
உழைத்து
களைத்து போனாலும்
எண்ணத்தை
உதராமல்
உறுதியாக இருக்கிறேன்...
உன்னை உருவாக்கி
என்னை நிலைநாட்ட...!

-



உரைநடையும்
செய்யுளும் சேர்ந்ததே
தமிழ்...!
அவ்வாறே
ஆணும் பெண்ணும்
சேர்ந்ததே
மனிதம்...!
இங்கு இரண்டும்
சமமில்லை
ஆனால் இரண்டும்
உயர்ந்தது...!

-



தூக்கம்...!

நித்திரையின்
போது நீங்காத
நினைவுகளாய்
சில சகாப்தங்கள்
இறுதியில்
தூக்கம் பறிபோனது...!

‌‌‌‌

-



வருட பிறப்பு...!

அனைத்தும் இழந்த
பிறகு
என்‌ நம்பிக்கை மட்டும்
அடுத்த பயணத்தை
நோக்கி...!

-



இறப்பு...!

பிரபஞ்சத்தில் பிறந்து
அனைத்தும் இழந்து
இறுதியில்
ஆன்மா பிரிந்து
ஊர் அறிந்து
சுற்றமும் அழுதால்
நீயும் மனிதனே...!
நல்ல மனிதனே...!

-


Fetching கவிதை கிருக்கன் 🖊️ Quotes