பூவையர் கொஞ்சும்
பூலோகக் கண்ணா,
பூவிதழ் விரித்த
பொக்கைவாய் மன்னா,
செந்தாமரைக்
கண்ணக் குழியில்
வீழ்ந்த என் உலகம்
உன் தெய்வீகப்
பார்வையால் மகிழ்ந்தது,
பிஞ்சு விரல்கள் தீண்ட
மனதும் தேனாய்
இனிக்குதடா..

- Kamal