கவி இளவல் தமிழ்  
374 Followers · 10 Following

Joined 1 August 2018


Joined 1 August 2018

மருந்தென மிருகமாய்
இருந்தது காமம்,
பின் நோயென மனிதன்
காதலைச் செய்தான்!

-



கோவில் யானைக்கு மதம் பிடித்து
கொல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கோவிலும் மதமும் யானையைப் பிடித்துக்
கொள்ளாமல் இருந்தாலே போதும்.

-



மதத்திற்கு
யானையைப் பிடித்துவிட்டது
#பிள்ளையார் !

-



எல்லாமாய் இருக்கும் அம்மாவிற்கு
எப்போதும் நேரமில்லை
அவளாக இருக்க மட்டும்..

-



இது சாம்பலிலும் சாதி தேடும் சளுக்கர் நாடு
இங்கே செத்தாலும் சாதிக்கொரு சுடுகாடு
கொள்ளைகொள்ள பொய் புரட்டு பலதும் பேசும்
இது பிள்ளை கொல்லும் பிணம் தின்னும் பேய்கள் தேசம்.

-



ஓங்கி வளருது செந்தீ உள்ளில்
ஓர்மம் உருகி ஓடிச் சரியுது
காதல் இருக்குது மிச்சம் உள்ளக்
கூட்டில் ஒருவித வெப்பம் தகிக்குது
காலம் கைவிட் டாலும் என்னை
கேளிர் மறந்திட் டாலும் கெட்ட
மேனி வஞ்சித் தாலும் பிணி
மேவி துயர்மிக நிந்தித் தாலும்
உடற் கூனிக் குழைவுற் றாலும்
குத்தும் சொற்கள் கூறிட் டாலும்
தீயழ லடங்குவ தில்லை இனியும்
தீர்ந்து மடிந்திட நானா ளில்லை

-



குறைந்தபட்சம்,
குனிந்து கையிலெடுத்து
ஓரிரு முறை திருப்பிப்பார்த்துவிட்டு
தூக்கி எறிவதென ஒரு
அறுந்துபோன செருப்பிடம் காட்டும்
அந்தப் பரிவையாவது நீ
என்னிடமும் காட்டியிருக்கலாம்
என்பதைத்தவிர எனக்கும் கூட
உன்னிடம் சொல்லப் பெரிதாய்க்
குறைகளொன்றுமில்லை.

-



”வாய்ப்பிருக்கிறது”

காற்றில் ஒடும் மேகத்தில் ஒழுகுகிறது கடல்
நிலத்திற்கடியில் நிம்மதியாய் உறங்குகிறது மழை-
மலையிலிருந்து செங்குத்தாய்ச் சரிந்து விழுகிறது நதி
கிடைமட்டமாய்க் கிளைத்துப் பரவுகிறது அருவி
அது முடியுமிடத்தில் பரந்து கிடந்து பரிணமிக்கிறது
முன் சொன்ன மேகம்-யார் கண்டது
என்றோ ஒரு நாள் இருந்திருக்கக் கூடும்
நான் நீயாகவோ நீ நானாகவோ.

-



சாமிக்கிட்ட படையலில்
எறும்பு தின்ற பருக்கை நீ !

-



ஒரு மிடறு தேநீர் உறிஞ்சி
உதட்டோரத்து
துளி துடைக்கையில்
மிகச் சுமாராய்
மொழிபெயர்க்கப்பட்ட
ஓஷோ கவிதையொன்றின்
சாயலுனக்கு.

-


Fetching கவி இளவல் தமிழ் Quotes