இன்னதென தெரியாமல் ஆயிரம் கனவுகளுடன் உன்னையே சுற்றி வட்டமிடும் அவைகளுக்கு உயிர் கொடுக்க ஆயுளுக்கும் என்னுடன் தொடர்ந்து வருவாயா
-
தேடும் விழிகளின்
தேவையெல்லாம்
உன்னுடன்
கைகோர்த்து நடக்க
ஊரே வியந்து
பார்க்க
ஆஹா நல்ல
ஜோடி பொருத்தம்
என்று மனதார
புகழ்வதை விட
வேறென்ன
பெரிதான ஆசை
இருந்திடும்
இவளின் பாழாய்
போன மனதின்
ஆழத்தில்-
விழித்திருக்கும் இரவுகளில் தனிமைக்கு துணையாக
அவன் உடனிருந்தாலே போதும்
அவனை அணைக்கும் வரை உறக்கம் கண்களை தழுவாது-
தேவதையின்
உலகத்தில்
தேடாமலே நேசமும்
தேவைக்கதிகமான பாசமும்
வேண்டாமலே கிடைத்திடும்-
பணிவாய் இருப்பதால்
பயந்தவன் என்றோ
பலவீனமானவன் என்றோ
எண்ணிடாதே அதுவே பலம்-
மூச்சிருக்கும் வரை
பேச்சிருக்கும் வரை
நினைவுகளில் கலந்தே
நித்தமும் நீராடும்
முதல் காதலின்
ஞாபகங்கள்
என்னையே மறந்தாலும்
உந்தன் நினைவுகள்
உயிர் உள்ளவரை
எனக்குள் வாழும்-
மை தீர்ந்தாலும்
மையல் தீர்வதில்லை
காதல் ஓய்ந்தாலும்
கவிதைகள் ஓய்வதில்லை-
நீண்ட இடைவெளியில்
ஓடி வந்த பேரன்பின்
உள்ளமே காலவரையற்று
தொடரட்டும் இனிமையாக🤗🤗-