உண்மை மட்டுமே
பரவட்டும் உங்கள்
உள்ளத்திலிருந்து,
நன்மை மட்டுமே
வந்து சேரட்டும் உங்கள்
இல்லத்தில் என்றும்..!-
ஓர் மெல்லிய
நழுவல் இருக்கும்,
ஓர் அடர்ந்த
தழுவல் இருக்கும்,
ஊரெல்லாம் சுற்றிவிட்டு
தன்னாலே வந்து
கூண்டுக்குள் அடைபடும்
கோழிகள் போல...!-
நான் தொலைக்க
ஏதுமில்லாத போது,
எனக்குத் தேடவும்
ஏதுமில்லை.
எல்லாவற்றையும்
தொலைத்த பிறகு...
தொலைத்த இடமும்
பொருளும் நினைவுண்டு
ஆனால் அங்கு செல்லத்தான்
வழியில்லை இப்போது..!-
முத்தமிட்டுப் போ,
உயிர் வாழ
துடித்துக் கொண்டிருக்கும்
என் மெல்லிதயத்திற்கு🧡
அதுவே கிரியா ஊக்கி...-
உண்மையில்
குழந்தைகள்
உடைக்கின்ற,
பொம்மைகள் மட்டும்
சிரித்துக் கொண்டே
உடைகின்றன..!-
உடல் உரசி
வரும் வெப்பத்தில்
குளிர்காய்கிறேன்,
தலை கோதி
வரும் வாசத்தில்
ஜீவன் நனைகிறேன்.,
காய்ந்த இதழ்களை
ஈரம் செய்து
உயிர் வாழ்கிறேன்...!-
அழுகையும், ஆற்றாமையும்
சில நேரங்களில்
கவலைக்கு பதில் கோபத்தை
ஊற்றிவிட்டு போகிறது
முகத்திலும், மனதிலும்...-
நான் உடைந்திருக்கிறேன்,
அதனால் தான் எங்கும்
சிதறிக் கிடக்கிறேன்.
நான் விழுந்திருக்கிறேன்
அதனால் தான் இப்போது
எழுந்து கொண்டிருக்கிறேன்.
உச்சியின் நிழல் நிச்சயம்
தரைதொடும், ஆனாலும்
ஒருபோதும்
"கோபுரங்கள் சாய்வதில்லை... "-
பார்த்தவுடன்
பிடித்துப்போனது
பகிரத்தான்
பயம்கொள்கிறது,
பச்சை_நிற புடவையில்
பகிரங்க அறிவிப்பு,
அவள் என் அன்னை
மீனாட்சியின் சாயல்...!-
கவலைகள் நம்மைச் சுற்றி
வலை வீசாமல் இருக்க
கற்றுக் கொள்வோம்
ஏனென்றால்,
களைப்பும் கவலையும்
ஒட்டிப் பிறந்த 🐣🐣
இரட்டைக் குழந்தைகள்...-