எதிரில் நீ இருந்தால் எப்படி என்ற
கனவிலேயே என் காலம் நகர்கிறது-
Insta@krithysarowritings
நான் உன்னுடன் செலவிடும் நேர
ஓட்டத்தில் மட்டும் எனக்கு இருந்ததே இல்லை!!
உன்னுடன் இருக்கும் போது இருக்கும் திருப்தி விடைபெறும் போது ஏனோ தூரம் செல்கிறது.
-
ஏராளமான தொலைவில் தான் உள்ளோம்
இருந்தும் நம்மிடையே உள்ள இடைவேளை நீளவில்லை-
இந்த பாரதியின் கண்ணமாவாக
இருப்பாயா? என்று கேட்டாய்
நானும் மௌனம் சாதித்துவிட்டேன்.
பதில் அறிந்த கேள்விக்கு,
நான் ஏன் விடை சொல்ல வேண்டும்
என் வாய்மொழி கேட்க அப்படி என்ன ஆசையோ கேட்டுவிட்டாய்
சொல்கிறேன் உனக்காக
எனக்காக விதிக்கப்பட்டவன் நீ
உனக்காக விதிக்கப்பட்டவள் நான்
இதில் நீ பாரதி என்றால் நான்தானே உன் கண்ணம்மா
நான் மழைத்துளி என்றால் சிப்பி நீ
கடல் சென்று கரையாமல் முத்தாய் உன்னுள்ளேயே இருப்பேன் என்றும் ❤️
-
ஏன் அவன்?
இந்த கேள்வியை கேட்காத ஆளே இல்லை
என் உற்றத்திலும் சரி சுற்றத்திலும் சரி
கடைசியில் நீயும் அதை கேட்டுவிட்டாயே
கருப்பான என்னை மட்டும் ஏன் என்று
அதை எப்படி சொல்வேன்
கோகுலத்தில் அத்தனை ஆடவர்கள் இருந்தாலும்
அந்த ராதைக்கு எப்படி கண்ணனை தாண்டி கனவில்லையோ
எனக்கும் என் கண்ணனை தாண்டி கண் செல்லவில்லை என்று!!
-
அவள் அவளிடம் உரையாடும் பொழுதுகளை கூட களவாடிய அவனின் நினைவுகளை எண்ணுகையில்
தூரத்தில் எங்கேயோ கேட்கிறது,
"மனதை மையம் கொண்ட மணாளன்" என்ற வரிகள்
அவளையே அறியாமல் அத்தனை வெட்கம் அவள் இதழ் ஓரங்களில் குடிகொண்டன.-
ஏளனமாய் நகைத்த கவிதை அனைத்திற்கும்
அர்த்தம் உணர்கிறேன் எனக்கானதாய் இன்று உன் அருகினில்.-
முன்னறிவிப்பு இல்லாமல் வரும் உன் நினைவுகளுக்கு
கொஞ்சம் நாகரீகம் சொல்லிக்கொடு-