உயிருக்குள் உயிரை வைத்தது
பிரம்மனின் படைப்பு,
பத்து திங்கள் சுமந்து பெற்றது
சிசுவின் பிணைப்பு,
அன்னை என்ற பட்டம் பெற்றது
மனதின் திகைப்பு,
உலகம் கூட மறக்க வைத்தது
அதன் சிரிப்பு,
வளரவைத்து புரிய வைத்தது
வீட்டு வளர்ப்பு,
தோள் மேல் வளர்ந்த பின்
தொலைவில் செல்வதில்
மனதின் தவிப்பு....
-
🐟𝕊𝕒𝕘𝕚𝕥𝕥𝕒𝕣𝕚𝕦𝕤
👷♂️ℙ𝕣𝕠𝕔𝕖𝕤𝕤 𝔼𝕟𝕘
👩❤️👨𝟙𝕁𝕦𝕝
... read more
அன்னையர் தின வாழ்த்துகள்.
11.05.2025..
அன்புடன் அரவணைக்கும் பண்பும்,
ஆசையுடன் அணைக்கும் மனமும்,
இல்லறத்தை வழிநடத்தும்
ஈகை குணமும்,
உள்ளத்தில் தெளிவு பெற
ஊன்றுகோல் போல் இருந்து,
எண்ணத்தில் நிறைவு பெற
ஏற்றத்தாழ்வுகளை கற்றுத் தந்து,
ஐயமின்றி உலகில் வாழ,
ஒருங்கிணைந்த உலகுடன்,
ஓங்காரமாக வாழ்ந்து,
ஔடதம் தந்து பாதுகாக்கும்
அன்னையர் அனைவருக்கும்
அன்னையர் தின வாழ்த்துகள்.....
-
மனம் என்ற ஒன்றுடன்
தினமும் நம் பயணம்,
கனமான அதன் குணமும்,
திடமான அதன் நிறைவும்,
பலமான நம் ஆயுதம்,
அமைதியை பாதுகாக்க,
ஆக்ரோஷத்தை அடக்கியாள,
இன்னல்களை மறக்க,
ஈகையை வளர்க்க,
உண்மையை நிலைக்க,
ஊக்கத்தை அளிக்க,
எண்ணத்தை சிறக்க,
ஏற்றுக் கொள்ளும் விதத்தை
ஐயமின்றி விளக்க,
ஒன்றுசேர வழிகாட்ட,
ஓங்காரமான வாழ்வை
ஒழுங்காக அமைக்க,
ஔடதம் தந்து ஆரோக்யம் காக்க
அனைத்திலும் அதன் பணி
அனைவரிடத்திலும்
அங்கலாய்க்கும் .......-
எரியும் விறகின்
நெருப்பில்
அம்மாவின்
நெற்றியில்
உதயமான
வேர்வை துளி
முத்து மணி
மாலையாக
கழுத்தை
அலங்கரித்தது-
சிந்தனைக்குள் எத்தனையோ....
சேகரித்த சிந்தனைக்குள்
ஆதரித்த சில சொற்கள்,
சேமித்த எண்ணத்தில்
தேங்கி விட்ட சில வார்த்தைகள்,
சிதறிய தேடலில்
சிந்தி விட்ட சில சங்கதிகள்,
தேடிய சிந்தனைக்குள்
தொலைந்து விட்ட சில நாட்கள்,
செதுக்கிய சிந்தனைக்குள்
ஒதுங்கி கரை சேர்ந்த தருணங்கள்
ஓடிய சிந்தனைக்குள்
ஒளிந்து விட்ட சிக்கல்கள் ,
வருடிய சிந்தனைக்குள்
வியந்த சில நெருடல்கள்,
என எதார்த்தமாக அலையும்
எண்ண அலைகளின்
எழுத்துக் கடலுக்குள்,
ஏராளம் சிந்தனைகள்
எதை எதையோ தேடிக் கொண்டே
எழுத்துலகில் சுழல்கிறது......
-
எண்ணத்தின் பரிமாற்றம்,
ஏராளம் ஏற்றங்கள்,
எழுத்துகளின் சிதறல்கள்
ஏராளம் தெளிவுகள்,
வார்த்தைகளின் வருடல்கள்
ஏராளம் கருத்துகள்,
வரிகளின் அலங்காரங்கள்
ஏராளம் திருத்தங்கள் ,
கருத்துகளின் வேறுபாடுகள்
ஏராளம் சீர்திருத்தங்கள்
வாழ்வியலின் ஓட்டம்
ஓயாத போராட்டம்....-
உன்னை நீ உணர்ந்து கொள்ள
உனக்குள் போராடு,
உன்னை நீ புரிந்து கொள்ள
உள்ளத்துடன் போராடு,
உன்னை நீ தெரிந்து கொள்ள
மனதுடன் போராடு,
உன்னை நீ மறந்து கொள்ள
எண்ணத்துடன் போராடு,
உன்னை நீ உலகில் காட்ட
உலகத்துடன் போராடு,
வாழ்க்கையே போராட்டம் தான்
என்றாலும் அதனுடனும் போராடு,
பாராட்டும் வார்த்தைகளும்
போராடும் உன்னுள்ளே...
தாலாட்டும் வார்த்தைகளும்
தன்னிலை வகிக்கும் உனக்குள்ளே...
-
அவளோடு பேசவே
அழகான வார்த்தை
அலங்கரிக்கும் அதனை,
ஆழமான வார்த்தை
ஆச்சரியமளிக்கும் எதையோ,
இயல்பான வார்த்தை
இனிமை ஆக்கும் உள்ளத்தை,
ஈர்க்கின்ற வார்த்தை,
ஈடு செய்யும் எதையோ,
உன்னதமான வார்த்தை,
உணர வைக்கும் மனதை,
ஊக்கமான வார்த்தை
ஊஞ்சலாட்டும் உள்ளத்தை,
எழிலான வார்த்தை ,
எண்ண வைக்கும் எதையோ,
ஏற்றமான வார்த்தை,
ஏற்றுக் கொள்ளும் எதையும்,
ஐக்கியமான வார்த்தை,
ஐயம் தீர்க்கும் அதையே,
ஒன்று சேரர்ந்த வார்த்தை,
ஒருங்கிணைக்கும் உலகை,
ஓங்காரமான வார்த்தை,
ஓங்கி எழ வைக்கும் எதையோ,
ஔடதம் அளிக்கும் வார்த்தை
ஔவை தந்த ஆத்திச்சூடி,
அடுக்கடுக்கான
வார்த்தைகளுக்குள், தடுக்கி விழுந்த
மனமும் தடம் கண்டு கொண்டது
தனக்குள்ளே.....-
தினமும் புதிதாய் பிறக்கிறேன்
உள்ளத்தை அறிந்து கொள்ள
எண்ணத்தில் தெளிவு வேண்டும்,
உணர்வுகளை அறிந்து கொள்ள
உள்ளத்தில் ஊக்கம் வேண்டும்,
எண்ணத்தை அறிந்து கொள்ள
எதிலும் நிதானம் வேண்டும்,
உலகத்தை அறிந்து கொள்ள
பலவிதத்தில் பலம் வேண்டும்,
உன்னை நீ அறிந்து கொள்ள
தனித்துவத்தை அணுக வேண்டும்....
அத்தனையும் அறிந்து கொள்ள
நித்தமும் புதிதாய் பிறக்க வேண்டும்...
-
நினைவுகளுடன் வாழ்கிறாயா
நினைவுகள் உன்னுடன் வாழ்கிறதா,
கனவுகளுடன் வாழ்கிறாயா
கனவுகள் உன்னுடன் வாழ்கிறதா,
மனதுடன் வாழ்கிறாயா
மனம் உன்னுடன் வாழ்கிறதா,
உணர்வுகளுடன் வாழ்கிறாயா
உணர்வுகள் உன்னுடன் வாழ்கிறதா,
சுமைகளுடன் வாழ்கிறாயா
சுமைகள் உன்னுடன் வாழ்கிறதா,
என்ற உள்ளத்திற்கு, தெள்ளத் தெளிவான
பதில் இல்லாமலே
பலகாலம் .....
ஏன் இந்த வாழ்க்கை ?? என்ற
கேள்விக்கு விடை தெரியாமலே
நிகழ்காலம்,
புரியாத புதிருடன் பயணிக்கும்
மனதுடன், எண்ண வரிகளே,
என்னை மீட்டும் வீணை போல்,
வீணாகும் நேரத்தை,
பொன்னான நேரமாக்கி,
மனதை அமைதியாக்கும்
அழகான பொக்கிஷம்.....
வரிகளில் இளைப்பாறி,
வார்த்தைகளில் களைப்பாறி,
எழுத்துகளுடன் இக்காலப்பயணம்
கட்டணமின்றி தொடர்கிறது....
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
-