Kavira Uthayan  
1 Followers · 2 Following

Joined 1 June 2022


Joined 1 June 2022
9 OCT 2023 AT 20:11

பாசத்தையெல்லாம்

பரணில்மூட்டைகட்டு

பணமா பாக்கெட்டுலகட்டு

அண்ணன்என்னடா

தம்பிஎன்னடா

அப்பாஎன்னடா

அம்மாஎன்னடா

பணமில்லாத உலகத்துல ....

_கவிரா.

-


7 OCT 2023 AT 9:01

நினைவுகள் ...


மூடிய சாக்கடைக்குள்

மூழ்கிக் கிடக்கும் குப்பைகள் ...


_கவி.ராஉதயன்,சென்னை_ 63 .

-


23 AUG 2023 AT 20:13

என்னவள் முகத்தில் பருக்கள்
ஆம் நிலவில் மேடு பள்ளம்
கண்டது சந்திராயன் _3...

-


23 AUG 2023 AT 20:07

என்னவள்
முகத்தில் பருக்கள்
ஆம்நிலவில் பள்ளம் மேடுகள்
கண்டது சந்திரயான்_3...

-


6 AUG 2023 AT 12:42

முட்டாள்த்தனமான

மூடநம்பிக்கைகளை

உடைத்து எறிய

மூலைக்கு மூலை

பூத்துக் கொண்டிருக்கிறது

நட்(பு)பூ...

_கவி.ரா.உதயன்,சென்னை_63.

-


6 AUG 2023 AT 11:31

கிறித்தவர்களுக்கு மட்டுமே அனுமதி

என்றுஎந்ததேவாலயங்களிலும்

காணமுடிவதில்லை?

வேற்றுமதத்தவர்கள் நுழைந்துவிட்டார்கள்

புனிதம் கெட்டுவிட்டதுஎன்று எந்தமசூதியையும் கழுவிவிடுவதில்லை?

குழந்தை பயந்து விட்டது என்று சென்றால்

மந்திரித்து விடுகிறார்கள் ...

இந்துமதத்தில் மட்டும் ஏன் கெடுபிடிகள்?

கெடுபிடிகளை க(லை)ளையுங்கள்

மதம் மாறுவது தடுக்கப்படும்...

_கவி.ரா.உதயன்,சென்னை_63.

-


29 JUL 2023 AT 9:40

தேர்வுத்தாள்திருத்த

பேராசிரியர்கள்

அனைவரையும்

வரவேற்கிறோம்.

_சென்னைப்பல்கலைக்கழகம்

தம்பிமுன்னாடி

திருத்தினதற்கு

இன்னும்

பணம்வரலை...

அதனால்

நாங்களும்

வரலை...

_கவிராமீம்ஸ்

-


26 JUL 2023 AT 18:01

விளைச்சல் முடிந்ததும்
நிலத்தைக்கையகப்படுத்தி இருக்கலாமே? ...

குழந்தைகளைக் கொன்றுவிடுகிறோம்...
இழப்பீடு தருகிறோம் என்பது போல்
பயிர்களைக் கொன்றுவிட்டு
இழப்பீடு தருகிறார்களாம்? ...

-


25 JUL 2023 AT 18:27

கிழவி கிழவன்

இளசுகள் பொடிசுகள் 

எருமைபன்றியென

பல்லுயிர்களுக்கும்

முத்தப்பரிசளித்ததுமழை...

_கவி.ரா.உதயன்,சென்னை_63.


-


21 JUL 2023 AT 9:14

நீதிதவறினால் இயற்கை வழங்கும் ...


கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை

கண்டுக்காத கட்டுப்படுத்தாத அரசுகள்

காந்தியின் கண்ணாடியைத் தாண்டி

கண்ணீர் வழிகிறது ...

மகள்களுக்காய்

பாரத மாதாவும் கதறுகிறாள் ...

சாதி அழகானது _மணி.

மணிப்பூரில் அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது ...

அகிம்சையைக் கொன்ற வன்முறை

மக்களின் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கிறது தீ...

நீதி தவறினால்?...

பூமி வாயைப் பிளந்து

மொத்தத்தையும் கொல்லும்...


_கவி.ரா.உதயன்,சென்னை_63.

-


Fetching Kavira Uthayan Quotes