உணவு இருக்க வாய்ப்பில்லை,
மழை நேரத்தில் கதகதப்பாகவும் இல்லை,
கூட்டத்திலிருந்து ஒரு காகம்
சில வினாடிகளுக்கு மட்டும்
வந்தமர்ந்து சென்றது.
நமக்குப் பிடித்த பாடல் எங்கேயோ ஒலிக்க,
நெரிசல் மிகுந்த சாலையிலும்
நின்று கேட்ட ஞாபகம் வந்தது.-
Aimless since birth.
Doctor by profession.
சிறகு முளைக்கும் வரை
பறக்காமல் இருப்பதால் தான் என்ன?
எட்டிப்பார்த்தால் வானவில்
தெரியாமலா போய்விடும்
பட்டாம்பூச்சியின் கண்களுக்கு!-
பிறந்தேன்.
இறக்கும் முன்,
எனக்கான மகிழ்ச்சிக்கு,
நானே காரணமாகும் போது,
வாழ்ந்தேன்.-
கடைசி வண்டியைப்
பிடித்தாக வேண்டிய
நேரத்தில் மட்டும்,
ஆட்டோவில் மீட்டருக்கு மேல் எவ்வளவு கேட்டாலும்
அதை நியாயப்படுத்திக்கொள்ள
ஓட்டுநரிடம் ஒரு காரணம் இருந்துவிடுகிறது!
-
வேறேதும் வேண்டாம்
இருசக்கர வாகனத்தில் பின்னமர்ந்து
அப்பாவின் மேல் சாய்ந்து
பயமின்றி தூங்கும் பிள்ளையின்
நம்பிக்கையை தந்துவிடு போதும்..-
அழுகையும் சிரிப்பும்
அயராது உதிர்க்கும்;
உறக்கத்தின் போதும்
கைவிரல் பிடிக்கும்;
உன்மீதான பேரன்பு
வரமே தான் எனக்கும்;
கருவிலே தொடங்கியது
இறுதிவரை நிலைக்கும்;
யாழின் இசைக்கு மொழியிருப்பின்,
அதிலியற்றிய கவிதை நீ;
சுவாசமாய் நீயாக
சட்டென காதல் கொண்டேன்.
-
பனி படிந்த கண்ணாடியில்
எழுதினானோ என் விதியை;
வெயிலிலும் காய்கிறது,
மழையிலும் அழிகிறது!
-சென்னை-
மழைக்கால கார்மேகம், கூந்தலின் உவமையாம் அன்று;
தெரியுமா அவர்களுக்கு,
புற்றுநோயின் புரிதலால்
வெயில் காலத்தையும் ரசிக்க முடியும் என்று...
-
Try to manage
the empty area in your mind,
which divides the magnitude
of your positive force;
in order to avoid getting pressured!-