வெள்ளை காகிதம் நீ என்று நினைத்தேன்
காகித கிறுக்கல்களில் என்னை உயிர் பெற செய்தாய் என்கிறாய் கவிதையாய் நீயும் கவிஞனாக நானும்-
கவிதை கவிஞன் வேறு அல்ல -
என்கிற வார்த்தைப்படி நடப்பவன்.......
வள்ள... read more
எழுவாரைத் தாங்கும் உழுவார் உழுவதால்
உலகத்தாற்கு கடையாணி ஆவர்-
சிறிதெனினும் செய்த உதவியின் பயன் ஆராய்வோர்
வானளவு பெரிது போற்றுவர்-
மௌன மொழியால்
சிந்தையில் கும்மியடிக்க
மொழியே விக்கித்து நிற்க
கவி எதிர்பார்கிறேன்
தத்தரிகிட தத்தரிகட தத்தரிகிட
என்கிறாய்
ஏங்கி பார்க்கும் விழிகளால்
கவிகளை கரைத்து சென்றாய்
மௌனித்து நின்றேன் நான்
தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட
என்கிறாள்
கவிக்கு கவி படைக்கும் என்னவனே
என்று பரிகாசம் செய்து
முக துதிகளால் என்னை வம்பு செய்யும்
குறும்பு வாலையவள்
தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட
என்கிறேன்
என்னை காக்கும் பொருட்டு
இயற்கை முயற்சித்து வெல்ல
மழை மேகம்
மாரி பொழிய ஆனந்தத்தில் துள்ளினாள் அவள் வர்ணிப்பை தொடங்கினேன்
தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட
என
-
கண்ணாமூச்சி விளையாடலாம் என்கிறாள் நெஞ்சுக்குழியில் நிறைந்து ஒளிந்திருக்கும் அவளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று நிலவொளியால் தான் என் உதிரமும் அறியும் என்று எவ்வாறு மொழிவேன் அவளிடம்!!!!...........
-
வஞ்சகம் இல்லா நெஞ்சும் கடமையுணர்வு
கொண்டவரிடம் இரத்தல் அழகே-
என் மூச்சுக்காற்றை உயிராய் சுவாசிக்கிறாள் என்னவள் ஆதலால் தென்காற்றே அவளை உரசி செல்லாதே
-
மனத்தழுக்கு உடையவரிடம் ஆக்கமிராது ஒழுக்கமில்லாதோன்
வாழ்வில் உயர்வு இராது
-
அவள் உற்பாதங்கள் தரையை முத்தமிட நெருங்கும் வேளையில் என் மூச்சுக்காற்றும் இடையில் தீண்டியது அவளை
-