Kartheeswaran Karthees  
1 Followers · 3 Following

read more
Joined 24 November 2021


read more
Joined 24 November 2021
26 JAN 2022 AT 6:24

அடிமை பட்டு கிடந்த
சமுதாயத்தை தட்டி எழுப்பவும்
எழுத்து பேச்சு சொத்து என
உனக்கான உரிமையை
உனக்கே அள்ளி ஊட்டவும்
தன் இன்னுயிரையும் இழந்து
மூச்சுக் காற்றை அளித்து
மூவர்ண கொடியை பறக்க விட்ட
என் மாவீரர்களுக்கும்
என் தமிழ் நெஞ்சங்களுக்கும்
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

-


13 JAN 2022 AT 22:26

பச்சரிசி பக்குவமாய்
அலசி எடுத்து
புது பானையில் தான் இட்டு
பொங்கும் தருணத்தில்
பொங்கலோ பொங்கல்
என கோஷமிட்டு...
கவலை என்னும்
கசப்பு நீங்க...
தித்திக்கும் தேன் கரும்பின் சுவையும்...
பொங்கி வரும் பொங்கலையும்
உலகுக்கே இருளை அகற்றி
வெளிச்சத்தை அளிக்கும்
என் பகலவனே...
உனக்காக படைத்து
வான் எதிரே கண் கூச நின்று
உன்னை வணங்கும்...
இந்த வையம்
வாழும் மாந்தருக்கு
என் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

-


13 JAN 2022 AT 22:06

உச்சி வியர்வையால்
நிலத்தில் உரமிட்டு...
வெயில் மழை பாராமல்
சேற்றில் பயிரிட்டு...
ஊருக்கே உணவழித்த
என் உழவனே...
அரைக்கோவணம் கட்டி
அடங்காத காளையையும்
அடக்கி ஆண்ட என் மாவீரனே...
பருவத்தை பார்த்து பயிர் செய்த
என் கணக்காளனே...
எண்ணில் அடங்கா
வாடிக்கையாளரை கொண்டும்
கண்ணீரை மட்டும்
கணக்கில் காட்டிய
என் பொக்கிஷமே...
உனக்கும்
தரணி போற்றும் என்
தமிழ் உள்ளங்களுக்கும்
என் இனிய தமிழர் திருநாள்
நல்வாழ்த்துக்கள்....

-


23 DEC 2021 AT 19:19

மழை
நிலத்தின் வெடிப்பை பார்த்து
கார்மேகம் விட்ட கண்ணீரோ..?
மாந்தரின் தாகம் தணிக்க
வந்த தண்ணீரோ..?
ஏறி குளங்களில் நிரம்பி வழிந்ததில்
கண்ணாடி என நினைத்து
வானம் தன் முகத்தை பார்த்ததோ...?
இடி என்னும் இசை
முழங்க வந்த என்
மழை என்னும் காதலியே
உனக்காக காத்திருக்கிறேன்
மீண்டும் வந்து என்
ஸ்பரீசத்தை நனைப்பாயா..?

-


23 DEC 2021 AT 18:48

அம்மா
உன் தொப்புள் கொடி மூலம் வேர் விட்டு
உன் நீரை ஊற்றி
என் தோட்டத்தை
பூவால் அலங்கரித்தாய்...
மண்ணாய் கிடந்த என்னை
கருவிலேயே உருப்பெருக்கினாய்..
தாங்காத வலியை அனுபவித்த போதும்
என் கண்களில் ஈரம் கண்ட உடன்
உன் வலிகளை அலட்சியப்படுத்தினாயே...
உலக பந்தங்கள் இன்னதென்று
சொல்லி கொடுத்தாய்...
உனக்கும் எனக்குமான உறவை
சொல்லிக் கொடுத்தவன் எவனோ...?

-


12 DEC 2021 AT 19:43

எது ஊனம்..?
கைரேகை பார்த்து
காலம் கழிக்கும் மாந்தரே...
கை இல்லாதவன் இவ்வுலகில்
சாதிக்கிறான் ...
சகுன தடை பார்த்து
வந்த வழி திரும்பும் மாந்தரே
கால் இல்லாதவன்
இவ்வுலகில் முன்னேறுகிறான்...
இருக்கும் உலகத்தை
ரசிக்க தெரியாத மாந்தரே...
கண் இல்லாதவன் தனக்கான
உலகத்தை படைத்து ரசிக்கிறான்...
ஊனம் என்பது என்ன..?
பிரம்மனால் வரையப்பட்ட
ஓவியத்தில் உடையப்பட்ட தூரிகைகள்..
சிற்பியால் செதுக்கப்பட்ட சிற்பத்தில்
சிதறடிக்கப்பட்ட கற்கள்...

-


8 DEC 2021 AT 16:38

Paid Content

-


6 DEC 2021 AT 19:04

கடிகார முட்கள் போல

கடிகார முட்கள் போல
காத்திருக்கின்றோம்...
கண்கள் சந்திக்கும்...
அந்த கண நேர நொடிக்காக...
பல கற்களை தாண்டி
சுற்றித்திரிகிறோம்...
காதல் என்னும் வட்டத்திற்குள்...
அவளும் நானும்...

-


5 DEC 2021 AT 19:58

இரவின் மடியில்

வானத்தை படுக்கையாய் விரித்து
நிலவினை பௌர்வையாய் போர்த்தி
நட்சத்திரத்தை தலையணையாய் தரித்து...
மார்கழி மாத மாலை நேர
தென்றல் காற்றை வாடகைக்கு
வாங்கி வந்து வீசச்சொல்லி...
இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்..

-


5 DEC 2021 AT 18:54

தொப்புள் கொடி உறவு
ஒற்றை மாதத்தில் சிசுவாய்
என்னை உருவாக்கி...
இரண்டு மூன்றாம் மாதத்தில்
என்னால் வரும் குமட்டலையும்
நான்காம் மாதத்தில் தலைவலியும்...
ஐந்தாம் மாதத்தில் வயிறுவலியும்...
ஆறாம் மாதத்தில் இடுப்பு வலியும்...
ஏழாம் மாதத்தில் வளையல் ஒலியும்...
எட்டாம் மாதத்தில் நான்
உதைக்கும் வலியும்...
ஒன்பதாம் மாதத்தில்
பத்தாம் மாதத்தை பற்றிய பயமும்...
பத்தாம் மாதத்தில் பிரவசவத்தில்
நீ துடிக்க...
உன் புனித நீரை தான் உடைக்க...
ஆயிரம் வலிகளை கண்ட போதும்...
உன் சதையால் உருவம் கொடுத்து...
உன் தொப்புள் கொடி மூலம்
உறவு கொடுத்து...
உன் மூச்சுக் காற்றை சலித்து
எனக்கு மூச்சு கொடுத்து...
உன் கண்களால் இந்த உலகத்தை
காணச் செய்து...
உன் இரத்தத்தை எனக்கு பாலாய்
திரித்து வைத்து...
என் அழுகுறலின் சத்தம் கேட்டு
நீ சிரித்த அந்த தருணம்
மறுபிறவி அல்லவா உனக்கு...

-


Fetching Kartheeswaran Karthees Quotes