எல்லாரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு! தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல், துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை!
-
உருகி நேசி கரைந்து விடாதே.......பணிந்து செல் அடங்கி விடாதே........பழகிக் கொள் நம்பி விடாதே......இருப்பதை கொடு இழந்து விடாதே....
-
தன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நன்மைக்கே என்று நம்பிக்கையோடு வாழும் ஒருவனை அவன் மனம் அனுமதிக்காமல்....வேறு எந்த ஒரு சக்தியாலும் வீழ்த்தவே முடியாது....எதிலும் விருப்பம் இருந்தால் அதை செய்ய ஆயிரம் வழிகளை கண்டுபிடிப்போம்....விருப்பமில்லை என்றால் ஆயிரம் காரணங்களை கண்டுபிடிப்போம்....
-
கங்கா ஸ்நானமும் புத்தாடை இனிப்பும் மத்தாப்பு சரமும் வாழ்த்துக்கள் ஆசிகளும் மகிழ்ச்சி ஆனந்தமும் எல்லோருக்கும் கிட்ட . உங்கள் இல்லத்தில் இன்பமும் .. உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்கிட என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .. !
-
உடம்பு படுத்து விட்டால் உயிருக்கு மரியாதை இல்லை....உயிர் அடங்கி விட்டால் உடம்புக்கு மரியாதை இல்லை....எல்லாமே நடமாடும் வரையில் தான்...இல்லாததை தேடுங்கள்....நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்....இழந்ததை மட்டும் தேடாதீர்கள்....அது நிச்சயம் வேறு ஒருவர் கைகளில் கிடைத்து இருக்கும்....
-
ஒண்ணும் செய்யாது... சரியாய்ப் போய்டும்...
என்ற வார்த்தை அற்புதமான மந்திர சக்தி வாய்ந்தது...
கடவுளின் சொற்கள் அது... நமக்காக யாரேனும் சொல்வர்... சொல்பவரே கண்ணில் தெரியும் கடவுள்
அது உறவாகலாம்... இல்லை நட்பாகலாம்!-
ஆகாயம் போல் பூமி இல்லை தான்..
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமி தான்..
நீ நீயாகவே இரு! நேற்று போல் இன்றில்லை;
இன்று போல் நாளையில்லை..அதனால் ஒவ்வொன்றும் அற்புதம் தான்..
எனவே நீ நீயாகவே இரு!-
கிடைத்திடாதா என்ற ஏக்கத்தில் தென்பட்ட அன்பை விட கிடைத்தபின் தொலைத்திட கூடாது என்ற தவிப்பில் தென்படும் அன்பின் அழகு வெகு அழகு ...
-
குணம் உள்ளவர் கோபுரம் போல ! பணம் உள்ளவர் கலசம் போல ! கோபுரம் மீது கலசம் இருக்கும் ஆனால் ! கலசங்கள் மாற்றப்படலாம் கோபுரங்கள் மாற்றப்படுவதில்லை ! குணமே என்றும் நிலைத்திருக்கும்
-
இங்கே பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்று தான் .. அவர்கள் செய்தால் சரி .. நாம் செய்தால் தவறு ..
-