என் பேனாவிற்குள்
வந்து உறைந்து கொள்ளும்
மொத்த உரிமையும்
உனக்கு மட்டுமே
என்ற ஒற்றை காரணத்தை
என்னுள் இருக்கும்
உன் விம்பம்
மொத்தமுமாய் உணர்த்தி விடும்
எக்கனமும்.-
மட்டூராள் 🐠 (மீன் பாடும் தேன் நாடு)
ஈழத்தி 🇱🇰
தமிழ் ஆசானின் ... read more
உனக்காக மட்டுமே நான்
எனக்காக மட்டுமே நீ ....
சுயமாய் நீயும் நானும் கொண்ட சபதத்தில் ...
திகட்டா சாகாவரம்
நம் காதல் ...
என்றும் உனக்காக மட்டுமே
இப்படிக்கு
எனக்குள் நீயாக உந்தன் நான்...
-
தொடு வானைத் தொட்டிடனும்...
தொலை தூரம் பறந்திடனும்...
காடு மலை தாண்டி
ஊர் ஊராய் போய் வரனும்....
உச்சி கிளையமர்ந்து
இறக்கைகள் கோர்த்து
உரக்க கீச்சிடனும்.....
நீ நான் மட்டுமே போதும்
நமக்கென்றொரு
கானகமும் போதும்.....
இறக்கை விரித்து பறந்திடலாம்
நீ ! நானாய்......
நான் ! நீயாய்.....
-
வெண்கட்டியாய் மேகம் கொண்டு
வரைந்திட்டேன்
உனக்கென்றொரு
வெண் மடல் ......
வானவில் தூரிகையால்
உன் உரு வடித்திட்டேன்
காரிகையே...!
தாள் மடித்து..
நிலவிடம் தூதிடவா?
உன் கரம் சேர்ந்திடத்தான்.......
-
அடுப்படியிலும்
கருகிப் போகிறது
அவளின் கனவுக் கறிச்சட்டி!!
என்றோ ஒரு நாள்
புசித்திடத் தான் போறாள் ....
நன்றாய் ஆக்கி......!!
-
சேர்த்த உனக்கான
என் ஒவ்வொரு நொடியையும்
பொக்கிஷம் செய்திடுவேன்....
உன் வருகையின்
அந்த தினத்திலே மொத்தமாய்
பரிசளித்திட !!
-
கண் சிமிட்டும் விண்மீன்களும் ..
மெத்தையாக வெளியில்..
கொஞ்சம் சொட்டும் தூறல் மழையில்...
மொத்தமாக இருந்து ..
பேசிடத்தான் ஆசை ...
நித்தம் உன் கூட!
-
என் நிமிடங்களை
கடக்கிறாய்!
கண்ணிடை கலக்கிறாய்!
கண்ணீராய் பிரிகிறாய்!
என் மௌனத்தில் மொத்தமாய்
உன் சிரிப்பினை
புதைக்கிறாய்!
நீ யாரடி?
-
என்னவள் பற்றிய
தேடல்கள் அத்தனையும்
என்னை மரிக்கச் செய்து
அவளுக்காய் மீண்டும்
பிறந்திடச் சொல்லி
பணிக்கின்றன...
நிஜங்களின் நிழல்கள் கூட
எல்லா கனங்களையும்
அவளோடு
பகிர்ந்திடத்தான் சொல்லி
கலைகின்றன...
அவளுக்காய் அவளோடே
நானும் என் ஆன்மாவும்.....-
நிராகரிப்புகள் ஒவ்வொன்றும்
குட்டி இடைவெளியை
உண்டாக்கிடும்!
அன்பின் பரிதவிப்பில்
மதி கலங்கி!-