ஒரு கணத்தில் எல்லாம் மாறி விடுகிறது.
ஒரே ஒரு சொல்,
சொற்கள் அற்ற வெறுமை,
பற்றிக் கொள்ள யாருமில்லாத தனிமை,
இப்படியான தருணங்கள் உயிர் உலுக்கி வெளியே எறிந்து விடும் நோக்கத்தோடு சூழ்ந்துக் கொள்ளும் போது ஒரு கணத்தில் எல்லாம் மாறி விடுகிறது. உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் கூட தோன்றி மறைகிறது. அவ்வாறான தருணங்களை எப்படி கடப்பது என்பதே வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் வாழ்க்கையை கொண்டு செலுத்தும் அனுபவத்தை தர வல்லவை.
பற்றிக் கொள்ளுங்கள், உடன் இருப்பவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் வாரி அரவணைத்துக் கொள்ளுங்கள். அழுகை வரும் அரவணைத்துக் கொள்ளும் ஆட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், ஒரு கணத்தில் எல்லாம் மாறி விடுகிறது!
-