வாசிக்க வாசிக்க மூடிக்கொள்கிறாய்
பக்கங்களை
*
எழுத்துக்கூட்டிப் படிக்கும் இதழ்களுக்குள்
இழைவன மெல்லின யிடையினம்
ஒலியாவன வல்லினம்
*
ஒளித்தே வைத்திருக்கிறாய் திறப்பதெப்போது ?
ம்ம்ம்...
புத்தகமா சொல்லும் !!!
*
கோடிடப் பிடித்தது
ஒரே ஒரு வரி
சிலிர்க்க சிலிர்க்க நனைந்தது
மொத்தம்
*
அந்திக்குப் பின்
பூக்கிறது
மயிலிறகு
பொழிகிறது
பூவிதழ்
மணப்பது
காயிதம்
*
பிழைத் திருத்தம்
செய்வதேயில்லை
உச்சி பிறழும்
உளறல்கள்
*
-