இளவேனில் கவிப்பிரியன்   (இளவேனில் கவிப்பிரியன்)
138 Followers · 171 Following

கவிஞர்
Joined 16 March 2018


கவிஞர்
Joined 16 March 2018

காத்திருக்கும் காவியத்தில்
கதைத்திருந்தேன் கவிநயத்தில்
ஊடலில் உளறலாய்;
தேடலில் தெள்ளமுதாய்,
வரையறையில்லா வசைமொழியாய்;
வகைப்படுத்திடா விந்தையாய்
சொல்ல சொல்ல,
சோர்ந்தேனோ சார்ந்தேனோ
யாதுரைப்பேன் யாவுமானதை..!

-



இரவின் தேடலிலே,
இலக்கியத்தின் பாதையிலே,
இமைகள் இமைக்காமல்,
இமையவளை தேடியதன்றோ..!

-



பூரணம் இல்லாமல் கொழுக்கட்டை பூர்த்தி ஆகாது;
உன் கதையாடல் இல்லாமல்
என் கட்செவியும் (what's app)
காலம் தள்ளாது.

-



நீ
நினைவலையின் நித்திலமா?
பிரிவலையின் பத்திரமா?
என்று
நிரந்தரமென்று நினைந்த,
நாளெல்லாம் நினைந்து;
நித்திரையை நிலைகுலைக்கின்றன.

-



இவ்வளவு ,அவ்வளவு,
எவ்வளவுதான் ,உள்ளதென்று,
வாழ்க்கை தத்துவத்தோடு
கதைப்பதை களைந்துவிட்டு,
முனைப்போடு முயல்வோமே
முன்னே.

-



உனதருமை எனதருமை
அவரருமை இவரருமை;
என்பதெல்லாம் புரிதலில்
புள்ளியிட கோலங்கள்..!

-



காலமென்னும் ஆழியிலே
காணவியலாத சோழியாட்டம்
களம் காண்கிறது..!

-



கடந்து வந்தவை
கலங்கி நின்றாலும்
நிகழ்ந்து இருத்தலில்
நிலைத்து இருத்தல்
நன்று..!

-



அவள்
இமைமொழி மவுனித்திட
இதயமொழியும் இலக்கியவளம் குன்றியதன்றோ..!!?

-



அவள்
இமைமொழி மவுனித்திட
இதயமொழியும் இலக்கியவளம் குன்றியதன்றோ..!!?

-


Fetching இளவேனில் கவிப்பிரியன் Quotes