:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::
அஸ்திவாரத்தில் சேரிக்குன்றின் கற்பாறைகள்.
கம்பீரமாய்க் கட்டப்படுகின்றது
ராஜகோபுரம்
:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::
கற்சிலையைக் கடவுளாக்கும் கோமியதீர்த்தம் தர்ப்பை மந்திரஉச்சாடனத்திற்கு
ஜாதியை மாற்றும் சக்தியில்லை
:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::-
எனது Profile படிக்க வந்தமைக்கு முதற்கண் வணக்கங்கள். 🙏🙏
... read more
:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::
கலவிக்கும் காமத்துக்கும் ஓகே
கல்யாணத்துக்கு மட்டும் நோ. நோ.
NO, by all means, NO only
:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::
களத்துமேட்டில் கலந்து கொள்வோம்
மணவறை கேட்டால் மட்டும்
பிணவறை அனுப்பிடுவோம்
:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::
கலப்பெல்லாம் காலங்காலமாய் உளது.
ஜாதியை நிர்ணயிப்பது பிறப்பிடம்:
மச்சா? குச்சா?
:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::;;;:::-
எனக்கு
காதல் கடிதம் எழுது
காதல்கவிதைகள் அனுப்பு
நேரம் இருந்தால்_
நேரிலேயே வந்து விடுதல்
அதனினும் சாலச்சிறப்பு
-
தத்துவம் எத்தனை வரி?
-----------------------------------------
பற்றற்றிரு - ஒற்றை வார்த்தையே தத்துவம்.
Do or Die - வெறும் மூன்று வார்த்தைகளே
ஒரு தத்துவம்.
கொன்றை வேந்தன் ஒரு வரி தத்துவம்
திருக்குறள் இரண்டு வரி தத்துவம்
நாலடியார் நாலு வரி தத்துவம்.
இரண்டு வரியில் எழுதினால்தான் அது ~தத்துவம்~ என்று நிர்ணயம் செய்ய முடியாது அல்லவா?
சொல்லப்போனால் யுவர் கோட்டில் கோட் என்பது நேரடியாக தத்துவம் என்று பொருள் அல்ல.
கோட் என்றால் மேற்கோள் காட்டுவது " ... "
அல்லது 'விலை' சொல்வது.
நாம் சொல்வது எல்லாமே கோட்-தான்.
அதை பிறர் மேற்கோள் காட்டி பயன்படுத்தும் போது அது <தத்துவம்> ஆகிறது. 👍-
என் இதய சாம்ராஜ்யத்தை
நீ அன்புப்படைகொண்டு
ஆதரிப்பது போல வந்து,
ஆதிக்கம் செலுத்தி
ஆக்கிரமித்து விட்டாய்...
அக்கிரம ஆக்கிரமிப்பு...
மேடை போட்டு,
மைக் வைத்து,
வால்யூம் ஏற்றி,
ஊரைக்கூட்டி,
உரக்க கத்துவேன்...
"ஓ.. சுதந்திரப் பிரியர்களே..
அடிமைப்படுங்கள்.
அன்பிற்கு அடிமைப்படுவதில்
ஆனந்தமிருக்கிறது" என்று.-
இமைகள் மூடாமல்
இருப்பதின்
இரகசியம் அறி.
இமைகள் இறங்க விடாமல்
இரும்புத்தனத்துடன் இருக்கிறது,
விழிநீர்ப்படலம்.
அதன் வலிமை அறி.
அதன் வலி அறி.
பார்..
வருவான் பார்.
படலத்தைப் பார்த்ததும்_
கேட்டதனைத்தும் கிடைக்கும் பார்.
நிலுவை அனைத்தும் நடக்கும் பார்.-
உன்னிடம் தீரட்டும்
எனது தீராத ஆசைகள் -என
ரசிக்க வைத்து சிக்கவைத்து
சிறைப் பிடிப்பதற்கென்றே
சீராக சீர் அமைத்து_
Centripetal force பயன்படுத்தி
என் கவியின் மையத்திற்கு
உன்னை வரவழைத்தேன்.
ஹா...
அப்புறம் பார்த்தால்
உன் மைவிழி மையலில்
நான் சிக்குண்டு கிடக்கின்றேன்.-
லாங் சாட்டில் ரவுண்டு அடிக்கும்
ஹெலிகாப்டர் சாட் வைத்து
நடு நடுவே நம்மைக் குளோஸ்அப்பில் காட்டுவார்கள்
கேமரா முன் கொஞ்சம் கண்ணைச் சிமிட்டு
புன்னகை செய்; காதலாய்ப் பார்; கழுத்து நரம்பு புடை;
உதடு குவித்து பறக்கும் முத்தமிடு;
முகத்தைச் சாய்த்து நாணு; நாசியை விடை;
விழிகளைச் செருகி மூடிச் சொக்கி மூடி கிறக்கம் காட்டு
உடையப் போகும் பாறையில் உயிரைப் பணயம் வைத்து
நர்த்தனங்கள் நாட்டியங்கள் ஆடுவதெல்லாம்
நமது டூப்புகள்தானே?! நமக்கு என்ன? நல்ல வருமானம்.-
இருட்ட ஆரம்பித்து வெகுநேரமாகியும்
மகளீஇர் மக்களின் விடியல் பயணம்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றது
-
வண்ண வண்ணப்பலூனெல்லாம் விற்பனைக்குத்தான்
பலூன் கடைக்காரரின் குழந்தைக்கு
அரசின் இலவச கருத்தடை பலூன்
-