𝓲 𝓐𝓶 ₹angz   (! Am ₹angz)
560 Followers · 205 Following

read more
Joined 10 December 2019


read more
Joined 10 December 2019

நீ எப்போது வருவாய் என
உரக்கக் கேட்டுக் கேட்டு
நச்சரித்துக் கொண்டே
காத்திருந்தது மனசு
உன் வருகையின் போது
பேரரவமாய் எழுந்து நீண்டது
அதன் பேரிரைச்சல்
ஆமாம்!?
என்னைப் பிடித்த நீ_
எனக்குப் பிடித்தவளா?
என் சிந்தைக்குப் பிடித்தவளா??
என் மனதுக்குப் பிடித்தவளா??
மனதுக்குத்தான் போலிருக்கிறது!
அதுதானே
‌ என்னை நச்சரித்து
உன்னை உச்சரித்து
பேரரவமாய் வரவேற்று
பேரிரைச்சலுடன் உபசரித்தது!?
நானோ
என் சிந்தையோ
அல்லதானே?

-



உறுமீனுக்காய்
அசையாது ஆசையாய்க்
காத்திருந்த கொக்குக்கு
எமனாகிப் போனான்
வேட்டைக்காரன்
அவனுக்குக் குறி வைக்கத்
தோதாக அமைந்தது
அசையாக் கொக்கின்
நீள் காத்திருப்பு
பசியாறக் காத்திருந்தது
உணவாகிப் போனது

-



நேருக்கு நேர்தான்
விளக்கம் சொல்லியிருந்தேன்.
விளக்கத்தை, கமெண்ட்ஐ டெலிட் செய்து விட்டு unfollow, block எனில் (மறுபடி) நேருக்கு நேர்
எப்படி முடியும்??

-



பாவம் .... அவளுக்குத்தான்
பார்வைத்திறன் செவித்திறன்
இல்லையே....

எங்ஙனம் கேட்பாள்? பாவம்
எங்ஙனம் புரிந்து கொள்வாள்??

-







-







-


YESTERDAY AT 8:47

மெத்தைகள் தேவையில்லை
தாயின் உருவம் வரைந்த
கட்டாந்தரை போதும்

சிறுமியின் ஏக்கம் விளக்க
வார்த்தைகள் ஏதும்
தேவையேயில்லை

-


YESTERDAY AT 8:28

கவி நள் 🙏👍
நன்று. ஆபாச வார்த்தைகள் ஏதும் இருப்பதாக என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. *த்தம் என்ற வார்த்தை கூட இல்லை.
இலைமறை காய்மறைவாகத்தான்
உவமை/உருவகப்படுத்தியிருக்கின்றேன்.
குறிஞ்சி என்றால் எந்தத் திணை என்பதை அறிந்தவருக்குத்தான்
அடுத்த வார்த்தைகளின் அர்த்தம் புலப்படும்.
அவ்வளவு தமிழ் அறிந்தவர்கள் இதைத் திருக்குறளின்
மூன்றாம் பாலில் அட்டவணைப்படுத்திக்கொள்வார்கள்.

எனினும்_ குறிப்பிட்டமைக்கு நன்றி.
இனிவருங்காலங்களில் கவிநள்-லில் எழுதினால்,
எழுதும் போது வார்த்தைகளில் கவனம் செலுத்துகிறேன் 🙏

-


YESTERDAY AT 8:01

காலையை ரசிக்க
எங்கே விடுகின்றன
கடமைகள்?

கடிவாளக் கண்மூடி போட்டுக் கொண்டு
கழுதை போல முதுகில்
குடும்ப பாரம் ஏற்றிக் கொண்டு
தேய்ந்து போன லாடத்துடன்
மெல்ல நடக்க விடாமல்
விலா-வில் தூண்டப்பட்டு
Trot-டிக் கொண்டிருக்கையில் ??

-


YESTERDAY AT 7:48

ஆக
இருக்கவே முடிவதில்லை

அப்போதுதான் மனம்
ஆயிரம் விஷயங்களை
இழுத்துப் போட்டுக்கொண்டு
அலசி ஆராய்ந்து சிந்தித்து
மேலும் குழம்பி போகின்றது

குழம்பித் தெளிவதற்கு
நெடுநேரம் பிடிக்கின்றது
அதற்குள் லௌஹீஹ வாழ்க்கைக்குத்
திரும்ப வேண்டி இருக்கின்றது


-


Fetching 𝓲 𝓐𝓶 ₹angz Quotes