திசைகள் ஆவலோடு...
மறைமுகமான தென்றலின் தீண்டலால்,
அசைந்தாடும் கருமை கூந்தல்...
ஆழ் கடலுமே எதிர்பார்ப்போடு - இமை
காவலில் முத்துப் பெட்டகம் - கள்வன் நான்,
சித்திர செவியோர கதையில்...
புரியாத பிழையில், உந்தன்
புதுமை புரிதலின் , ஊஞ்லாடும்
புதிரோடு பொற்ச்சிலை...
கலையொன்று கண்டேன்,
துளையிட்ட காவியத்தில்,
சிரிதாடும் சங்கீதமாய்...
கண்ணதின் வண்ணத்தில்,
திரைபூட்ட வெட்கத்தின், காவியமாய்
கன்னப்பூ சினுங்கல்கள்...
என் பரிவுகள் முத்தமொழியாய்,
அழகின் உணர்ச்சியின் தனிமொழியாய்,
மௌனம் உனது மறுமொழியாய்,
புரிந்தும் தலை ஆட்டும் காதோரக்காவியமே...
-