The moment you came
near me and whispered,
my glass of silence shatters
into pieces of words.
The bundle of my love
starts to scatter
as your fingers touch the knot.
The gentle touch of holding hands,
that familiar scent of you;
it is all I need in this moment.
I will always begin and end with you,
as every river seeks its sea.-
at the age of 14.
நடமாடும் மோனாலிசா,
சுடிதார் தரித்த தாஜ்மஹால்,
கலிலியோ பார்க்கத் தவறிய நிலவு,
கம்பன் எழுத மறந்த கவிதை...
இத்தாலி சாய்வு கோபுரமும்
இன்னும் கொஞ்சம் சாய்ந்து போகும்;
கிளியோபாட்ராவும் கொஞ்சம்
பொறாமை கொள்வாள்,
இவளைக் கண்டால்!-
மாதம் 50 ஆயிரம்
சம்பளம் கொடுக்கும் கம்பெனியில்,
வேலை பளு சலிப்புடன்
தேநீர் அருந்த அமர்ந்தேன்
அங்கு வேலை பார்க்கும்
15 வயது பையனை காணும் வரை..-
ஆதிக்க இடுக்கில்
சிக்கி கொள்கிற மனிதம்!
ஒரு புழுவுக்கு
முதுகுத்தண்டு உடைக்கப்பட்டது;
வாழ்நாள் முழுதும் மெலிந்து நெளிந்து
கருப்பு பூட்சில் நசுங்கி இறந்தது.
தோகை நினைத்து கர்வம் கொள்ளும்
ஆண் மயிலுக்கு, அதன் இறகுகள்
ஒவ்வொன்றாய் பிடுங்கப்பட்டது;
கூனிக்குறுகி உயிர் நீத்தது.
மூட்டைகள் சுமக்கும் கழுதைக்கு
கால்கள் உடைக்கப்பட்டது;
வயதாகும் வரை
ஊனமாய் சுற்றித்திரிந்தது.
இனி வருகின்ற,
அதன் சந்ததிகளின்
உதிரத்திலாவது
போராடுகின்ற ரௌத்திரம்
கொஞ்சம் கலந்து ஓடட்டும்!-
அல்ஜீப்ரா தேற்றம் போல
புரியாத கணிதம் நீதான்
அதிகாலை காபி போல
எளிமையான சுவை நீதான்.
பூவின் இதழ் தொடும்
பட்டாம்பூச்சியும் நீ தான்,
மனக் கடலின் ஆழம்
தொடும் நங்கூரமும் நீ தான்.-
காதலியும்
அரசு பேருந்தும் ஒன்று,
இரண்டுமே எவ்வளவு
காலம் காத்திருந்தாலும்
சரியான நேரத்திற்கு வருவதில்லை!-
பெயர் தெரியாத
ரயில் முகங்களுக்கு
கையசைக்கும் சிறுமி
கற்றுத் தருகிறாள்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்!-