ஒற்றை வார்த்தையில்
கவிதை எழுத சொன்னார்கள்
நான் சென்று
உன் பெயர் எழுதிவந்தேன்...-
நேற்றுதான்
நாம் முதலில் சந்தித்தது போன்ற உணர்வு;
அதற்குள் வருடங்கள் கரைந்து விட்டது.
மேகமாய் கடந்து போனாய்
நான் கைகளில் பிடித்திருக்கிறேன்
என நினைக்கும் போது,
அடுத்த பக்கங்களில்
நீ இல்லாத போதும்
கதை மட்டும் ஏன் நீள்கிறது;
உன் முத்தங்கள் பதித்த என் சட்டையும்
கேட்கிறது உன் இருப்பை,
கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரும்
தேடுகிறது உன் கைகளை,
நித்தம் கனவுகளில் நிற்கிறாய்
நிஜத்தில் நீ மறைந்தப் பின்பும்,
ஒன்றாக சுற்றி திரிந்த
இடங்கள் எல்லாம்
இன்று எந்தன் கால் தடங்கள் மட்டும்...-
ரயில் சிநேகிதமாய்
எந்தன் வாழ்வில் வந்தாய்,
இனி பயணமே உன்னோடு தான்
என தெரியாமல்..
நம் ஒன்றாக சுற்றி திரிந்த
தருணங்கள் எல்லாம்
என் நாட்குறிப்பில் தவறியதில்லை..
உள்ளங்கை இறுகப்பற்றும்போது
என் உலகமே
உன் கைக்குள் சுருங்கிவிடுகிறது..
எந்தன் குறைகள் மறந்து
நேசித்தவள் நீ!
இருள் சூழ்ந்த வாழ்வில்
ஒரு வானவில் நீ!
சிறிய நிகழ்வை கூட,
ஒரு வான வேடிக்கை போல
அழகாக்கியவள் நீ..
உன் காதுமடல் பின்
கூந்தல் ஒதுக்குவதை தவிர,
என்ன அதிகம் நான் கேட்க போகிறேன்?-
கொஞ்சம் நாட்கள் தானே
தனியாக இருந்து விடலாம் என்று
வந்து விட்டேன்.
அலைகள் வந்து பாதங்களில்
அணைத்துக் கொள்ளும் போதும்
உந்தன் ஞாபகம்,
குளிர் பானங்களில் இதழ்கள்
உரசும் போதும் உந்தன் ஞாபகம்,
நம் ஒன்றாக பேசி சிரித்த
காபி ஷாப்பை தனியாக
கடந்து செல்லும் போதும்
உந்தன் ஞாபகம்,
உன் வாசம் வீசும் என் சட்டையை
தொடும் போதும் உந்தன் ஞாபகம்,
நீ இன்றி கடக்கின்ற இரவுகளில்
எனை அதிகம் வாட்டியது
உன் நினைவின் குளிர் தான்!
அடுத்த சந்திப்பில்,
இறுகப்பற்றி தரும் உன் முத்தத்தை தவிர
நான் என்ன அதிகம் கேட்கப் போகிறேன்?-
இலக்குகளற்ற பயணங்கள்தான்
ஓடாமல் இருந்ததில்லை,
முடிவில்லா வானம் தான்
பறக்க மறந்ததில்லை,
அலைபாயும் கடல் தான்
நீந்தாமல் மூழ்கவில்லை,
இருள்போல் கேள்விகள் சூழ்ந்திட
நம்பிக்கை ஒளி
தான் பார்க்கிறேன் ;
எந்தன் குருதியின்
கடைசி சொட்டில் கூட
ஒரு கவிதை எழுதத்
தான் பார்க்கிறேன்.!!-
கல்லூரிக்கு வேறு நகரம்
இடம்பெயர்ந்த பின்பு,
என் அறையில் அடுக்கி வைத்த புத்தகங்கள்
தூசி படிந்து தனிமை நிரம்பி விடுகிறது,
விளையாடி நடை பழகிய தெருக்கள்
எல்லாம் அந்நியமாகிவிடுகிறது,
செல்லப் பிராணிகள் கூட
நினைவை விட்டு விலகுகிறது.
கடல் தாண்டும் பறவைகள்
தன் கூட்டை மறக்காதது போல்,
அவ்வப்போது விடுமுறை நாட்களில்
ஊருக்கு வந்து செல்கிறோம்.-
இரவில் மதுபான கடைகளில்
கூட்டங்களை காணும் பொழுதோ,
யாருமற்ற சாலையில்
நாய்கள் குறைக்க
கடந்து செல்லும் பொழுதோ,
சில அறிமுகமில்லா
நிழல்கள் நெருங்கும் பொழுதோ,
மணிரத்னம் திரைப்படங்கள்
போல் இருப்பதில்லை
எனத் தோன்றுகிறது;
இந்த மாநகர இரவுகள்!-
மேகங்களின் கூட்டத்தில்
ஒளிந்திருக்கும் நிலவைப் போல,
அவ்வளவு கூட்டத்திலும் நீ
என் பார்வையில் பட்டுவிடுகிறாய்.
வாகனங்களின் இரைச்சலிலும்
குருவிகளின் இசையைப் போல்,
உந்தன் மெல்லிய குரலை
நான் கேட்க மறப்பதில்லை.
யாரும் கண்டு கொள்ளாத
அந்த நெடுஞ்சாலை பூக்களை
போலத்தான் நீயும் எனக்கு...!-