உதிரும் போது உதிரும் உதிரத்தை உணர்வதில்லை, ஒருவேளை உணர்ந்திருந்தா்களேயானால், அவர்கள் இலையாக இல்லாமல் கிளையாக இருந்திருப்பார்கள்....
-
என்பதை விட எங்கிருந்தாலும் என்னை அவ்வப்போது நினைத்துக்கொண்டிருப்பாய் என்று நினைத்தே வாழ்கிறேன் மீதி வாழ்க்கையை நோக்கி....
-
நின்னை தேடும் என் நினைவு,
என் நினைவு நிஜமெனில்,
நின் காதல் நிழலோ....-
So, my dear,
I ask to you,
How I'm get back to you...?
Because,
Your my map,
Your my lead,
Your my goal......-
பாதுகாப்பற்ற மழலையாய் உணரும்பொழுதெல்லாம் அவ்வப்போது
மயிலிறகின் வருடலாய்
நின் வார்த்தைகள்,
கடலளவு துயரமும், சில கண்ணிர்துளிகளில் கரையும்,
நின் துணையொன்றிருந்தால்....-
நினைவுகளெல்லாம்
நித்தம் நூறு பரிசளிக்கும்,
தொட்டுச் சென்ற ஸ்பரிசங்களெல்லாம்
உன்னில் என்னை மூழ்கடிக்கும்,
காலமெல்லாம் காதல் கேட்டேன்,
ஆனால், என் காலமுழுதும் உன் காதலுக்கே கொடுத்துவிட்டேன்....-
இடரிடும் கனவுகளில்,
திணறிடும் உறக்கங்கங்களில்,
கிறுக்கிடும் கவிதைகளில்,
தவித்திடும் காதலொன்று,
பேசிட வார்த்தையற்று....
-
நின் நினைவால் உலா வரும் கனவுகளுக்கு, இரவினை பரிசளிப்பதை விட, எனைப்போல் தனித்திருக்கும் நிலவிற்க்கே பரிசளிப்பேன் என்னிரவை....
-