பலனற்ற நினைவுகளின் தொகுப்பு!!
அந்தந்த வயதில் அதற்குரிய தவறுகளை செய்து
பெரும் சூடின் பெயரே பக்குவம்!!
இப்பருவத்தில் செய்யும் தவறின் மருந்தை
பழைய சூடுகள் தருவதில்லை!!!
வாழ்வனைத்தும் நாம் பெரும் சூடு பிறரையும்
காப்பதில்லை!!
தனக்கும் உதவாது, பிறருக்கும் உதவாது
அசைபோட தேங்கி நிற்கும் நினைவுகளின்
தொகுப்பே "பக்குவம்"!!-
ரோசா என்றாலே "குளுமை"
நீயோ ஈரமான ரோசா!
உறைந்தே போய்கிறேன் உன்னிடத்தில்!!!-
கடவுள்கள் எனக்கு!
வேண்டும் அனைத்தும்
இரவு முழுவதும் கிடைக்கும்!!
-
கடவுள்கள் எனக்கு!
வேண்டிய அனைத்தும்
இரவு முழுவதும் கிடைக்கும்!!
-
இரவின் அழகும் குறைகிறது!
மின்விளக்கின் அருமையும் குறைகிறது!!-
இயல்பு மனிதனை மதிக்கும்
சுற்றம் அழிந்து ஆண்டுகள்
பல கடந்துவிட்டது!
மன்றாடியேனும் மதிப்பை
பெரும் புறச்சூழலே நிதர்சனம்!!-
கைகள் இணைத்து
கதிரவனை சிறையிட்டதாக
என்னும் இணையர்களுக்குத் தெரியவில்லை
அவர்கள் பெற்றிருப்பது
"ஆயுள் சிறை" என்று!!-
பலனொன்றுமில்லை!
வெளிச்சமான உலகின் ரணங்களை
மறக்க - இரவினில் சென்று
கற்பனையிலேறி இன்பவானை அடைகிறேன்!
இரவிலும் வெளிச்சம் என்றால்
என்செய்வேன்!-
"குழந்தை"
பாவம் குருவி - பட்ட மரத்தில்
பரிதாபமாய் நிற்கிறது!!
"குருவி"
பாவம் குழந்தை - பேச யாருமின்றி
பேசயியலா என்னை பேசச்சொல்கிறது!!-
ஆம் மொத்தம் மூன்று இதயம்!
வெளிப்படையாய் இரண்டு புறத்தில்!
இரண்டாய் பிளந்து ஈருடல்
சேர்ந்த "ஒன்று" !!-