நதிவாழ் மீனொன்று
கடல் சேர நினைத்தது,
நீந்தி நீந்தி ஓய, மீனவனின் வலைக்குள்.
அச்சத்தில் அலறல்,
வெளிவரத் துடிப்பு.
கடலும் சேராமல், நதியும் சேராமல்
நிலத்தில் தவிப்பு.
பிழைத்தால் போதும் என்ற அம்மீனின் கூக்குரல் யாருடைய காதிற்கும் கேட்கவில்லை.
தன் கனவு வெறும் கனவாகவே போனது.
இப்போது அந்த மீன்,
உடல் இருந்தும், உயிர் இல்லாமல்
விற்பனைக்கு கடையில்.
-