எந்தக் கைகளும்
இழுக்கவில்லை...
எந்தக் மேகமும்
என்னை தடுக்கவில்லை
எந்தச் செயற்க்கைக்
கோலும் என்னை
கண்டுக் கொல்லவில்லை...
நான் பறந்துக் கொண்டே இருந்தேன்
அவளைப் பார்த்ததிலிருந்து...-
Irulin nuniyil irunthu
Pagalin mela naan kuthikiren
Oliyin meethu thavazhnthu
Naanu voor Megam poley mithagiren...
Yaar Yaaro thandi sendren
Un mela pozhiya nindren🍀
-
இமைகள் என் கண்களை
அத்தனை இருக்கமாய்
கட்டி அணை(னை)க்க காரணம்...
எனக்குள் இருக்கும் உலகை
மறப்பதற்கா
இல்லை..
எதிரில் இருக்கும்
உலகை மறைப்பதற்கா...-
ஓர் தாய் தன் மகனை
பல வருடம் கழித்து
பார்க்கிறாள்...
சினிமாவைப் போல் கதறி அழாமல்
அன்பின் சாயல் நீங்கிய
கண்களால் அவனை வரவேற்றாள்
எல்லாரும் மனிதர்கள் தானே...-
ஆழ்ந்த உறக்கம் என்னை
அனைத்திடமிருந்து
அன்பாக பார்த்துக்
கொள்கிறது...-
எங்கிருந்தும் வாழ்க்கையை தொடங்கலாம்...
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்..
எங்கே வேண்டுமானாலும் உறங்கலாம்..
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... உயிர் உன்னை ஒன்றுமே சொல்லாது..
மனம் வேண்டுமானால் இவை அனைத்தையும் புறக்கணிக்கலாம்...-
அவளை பார்த்தேன்
கண்களால் சிரித்தேன்
அவளும் சிரித்தாள்...
பேசத் தொடங்கினோம்
பேசிக் கொண்டே இருக்கிறாள்...
என் மௌனம் அவள் பேச்சை
கலைக்கவேயில்லை...-
நம்மைச் சுற்றி இருப்பவர்களின்
சிறு சிறு சாயல்கள் தான் நாம்...
உங்களைச் சுற்றி இருப்பவர்களை
கவனமாக தேர்தேடுங்கள்...
நீங்கள் ஓவியமாக தெரிவதும்
கறையாகத் தெரிவதும்..
அதில் தான் உள்ளது...-
ஓர் கசாப்பு கடையில் நிற்கும்
ஆடுகளை விடவும்...
அத்தனை சக கோழிகளின்
இறப்பின் கதறலை கேட்டு
கூண்டில் சாவை எதிரே
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
ஒர் கோழியை விடவும்..
நம் துயரம் பெரிதல்லயென்று..
அன்று கசாப்பு கடையின் வரிசையில்
நின்று கொண்டிக்கும் போது
ஒர் எண்ணம் தோன்றியது....-
நண்பர்கள் இல்லாத
குடும்பத்தோடு பெரிய
தொடர்ப்பு இல்லாத
எந்த ஓர் கலை மீது சாயாத
வெறும் வேலை மட்டும் செய்து
வாழ்க்கையை நடத்தும்
சில மனிதர்களோடு
பேச வாய்ப்பு கிடைத்தது...
அவர்கள் உண்மையில்
பாவமான மனிதர்கள்...-