தலைவன் தலைவியின் ஊடல்..!!
"அந்த கலைமகள் கையில் இருந்து விழுந்த வீணை நீயோ..!
சிறு பிழையையும் கண்டு பிடிக்கிறாய்" என்றான்.
"அந்த கண்ணனின் கையில் இருந்து விழுந்த புல்லாங்குழல் நீயோ..!
கள்ளத்தனம் செய்கிறாய்" என்றாள்.
குழலும் வீணையும் சேர்ந்தால் இசை மணக்கும் என்றான்,
நீயும் நானும் சேர்ந்தால் மழலை மொழி இனிக்கும் என்றாள்..!!- பூங்குன்றன்
6 OCT 2018 AT 18:56