GO Cool   (பூங்குன்றன்)
132 Followers · 94 Following

read more
Joined 6 October 2018


read more
Joined 6 October 2018
26 OCT 2018 AT 0:00

அடிக்கும் புயலுக்கு அமைதி தெரியாதோ.?
அடிக்கும் விரலுக்கு அணைக்க தெரியாதோ.?
அசையும் கண்களுக்கு அழைக்க தெரியாதோ.?
அடிமேல் அடி வைத்து நெருங்க தெரியாதோ.?
அலரும் ஆந்தைக்கு இரவு தெரியாதோ.?
அத்தனையும் தெரிந்தும்
அழைக்காமல்
அணைக்காமல், நெருங்காமல்,
அமைதியின்றி இரவில்
அலர வைத்து விட்டாய்..!

-


8 OCT 2018 AT 20:42

காலையிலும் உன் தீண்டல்,
மாலையிலும் உன் தீண்டல்,
அவள் விடும் ஆவி காற்று,
எனை ஈர்க்கும் இன்பக் கீற்று.

இதழோரம்
நீ வருகையில்
இமைக்காமல்
விழித்திருந்தேன்
என்னை தூங்க விடாமல்
செய்யும்
"தேன் நிலவுக்காரி" அவள்..!
நீ என்ன தேனா சுவைப்பதற்கு.?
இல்லை
நீ என்ன நீரா வாழ்வதற்கு.?

தேன் நிலவுக்காரி,
இரண்டும் சேர்ந்த "தேநீர்" - என் பெயர் என்றாள்,
என்னவள் கையில் வந்த
முதல் கைக்குழந்தை அவள்.!!


-


29 MAY 2021 AT 12:09

மலர்ந்திடும் காந்தள் மலரவள்
விழியின் ஈரத்தில்
எழுந்திடும் வினாகுறி அவள்
இதழின் ஓரத்தில்
மெலிந்திடும் சிறு புன்னகை அவள்
கவிதை முற்றத்தில்
தவழ்ந்திடும் குழந்தை அவள்
நெஞ்சின் பக்கத்தில்
வருடிடும் வண்ண தூரிகை அவள்..!

-


28 MAY 2021 AT 12:13

பேனாவிற்கும் பேப்பருக்கும்
குழந்தை பிறக்குது

-


30 JUL 2020 AT 23:48

அவள் கூந்தல்..!

-


24 JUL 2020 AT 14:37

ஏய் மனிதனே..!
ஏன் போராட மறுக்கிறாய்.?
உன்னை உயிருடன் காக்க
உன் இருதயம் நொடிக்கு நொடி
நடத்தும் சண்ட மாருதம்
உன் செவிக்கு எட்ட வில்லையா..?
போராடு..!
வென்றெடு..!

-


23 JUL 2020 AT 15:39

நான் புன்னகையை
தானே வீசினேன்
நீ ஏன் கண்ணீர்ப்புகை
குண்டுகளை வீசினாய்.?

-


22 JUL 2020 AT 13:11

ஆம்,
நான் இன்றும் நீ ஏற்றி வைத்த
மெழுகுவத்தி தான்
நானோ உருகி உருகி
உனக்கு வெளிச்சம் தருகிறேன்
நீயோ
கனபொழுதில் என்னை ஊதி
அனைத்து விட்டாய்..!

-


11 JUL 2020 AT 17:29

இரு வார்த்தைகளின் இடைவெளி
எனக்கும் அவளுக்கும்..!

நான் பட்டாம்பூச்சியைக் காட்டினேன்
அவள் பட்டத்தைக் காட்டினாள்
நான் மின்மினிப் பூச்சியைக் காட்டினேன்
அவள் வின்மீனைக் காட்டினாள்

நான் வெண்தாமரையை காட்டினேன்
அவள் வெண்ணிலாவைக் காட்டினாள்
நான் வண்டி மாட்டைக் காட்டினேன்
அவளோ விமானத்தைக் காட்டினாள்

ஆம்.. எனக்கும் அவளுக்கும்
இரு வார்த்தைகள் தான் இடைவெளி

-


1 JUN 2020 AT 22:55

உரக்கச் சொல்வோம் உலகிற்கு
உலகம் யாவும் பொதுவென்று
உழைக்கும் மக்கள் ஒன்றுபடின்
கலகம் யாவும் வீழுமென்று

சொர்க்கம் நரகம் என்பார்கள்
சோற்றுக்கு வழி உள்ளவர்கள்
வீனர்கள் பேச்சை உதறி விடு
உன் கைகளை நம்பி உயர்ந்து விடு

மேலும் கீழும் என்பார்கள்
மனிதம் கெட்ட மனிதர்கள்
வானம் போல இருந்து விடு
வசந்தத்தை அள்ளி தூவி விடு

உரக்கச் சொல்வோம் உலகிற்கு
உலகம் யாவும் பொதுவென்று
உழைக்கும் மக்கள் ஒன்றுபடின்
கலகம் யாவும் வீழுமென்று..!

-


Fetching GO Cool Quotes