Gaana Rupini   (Gaana Rupini)
77 Followers · 18 Following

Sapiosexual
Joined 1 June 2017


Sapiosexual
Joined 1 June 2017
28 DEC 2023 AT 11:27

No more racing heart
No more sleepless nights
I didnt know that
it could change
in the blink of an eye.
Days feel calm and
Nights turned peaceful.
Is this the normal life?
Asks my wondering mind.
I could see more clearly
I could think in clarity
As if a veil had lifted intently
And The wait was over finally
From darkness to light
I come out merrily.
What makes all this happen?
That was not in my hands
To make it as i wish to beckon.
Life is only a wonder
Beyond our understanding
We can only ponder
With the beauty of its never ending....


-


23 NOV 2023 AT 12:48

Lust
That adoring crystals on the jewellery,
And the colour and shine it renders
beckoning to be worn on the wrist and neck
Those fragrances that uplifts the mood
The dim lights that soothens the eyes
That subtle mono sound of the piano
That ears would send to the brain
To crave forever
That soft silky cozy warm blanket
on a winter afternoon
my skin would pleasure with
That slow cooked love filled food
with relentless taste
which my appetite awaits
The choice of taking rest on a
busy weekday with no regrets
And more subtle things on earth
Makes the lustful desires for life.
Life is beautiful when it's lustful.

-


31 JUL 2023 AT 0:16

காதல்
முழுமையாய் வாழும் இடம்
பிரிவு.

திருமணம்
நம்மை நாமே திருத்தி எழுதும்
மற்றொரு தேர்வு.

இரண்டும் சேர்ந்துவிட்டால்,
ஒன்று- பெரும் வெற்றி
இல்லையேல் படுதோல்வி.

சேராவிட்டல்,
மனதின் இறப்பு
ஞானப்பாதையின் வழி திறப்பு .

-


30 JUL 2023 AT 22:53

அவன், அவள் ரசித்த
சில இசையில் இருந்தான்
சில கவிதை வரிகளில் வாழ்ந்தான்.
காற்று சில சமயத்தில்
அந்த இசையை சுமந்து வந்த போதெல்லாம்
அவள் அவனை உணர்ந்து கொண்டே இருந்தாள்.
பூமியில் எங்கோ ஒரு
மூலையில் இவளும்
வேறொரு திசையில் அவனும்
நினைவுகளின் அலைவரிசையில்
அப்பப்பொது இணைந்து கொண்டே,
கடந்த காலங்களின் ஞாபகங்களின் இனிமையில்
வாழ்ந்து கொண்டே...
கரைந்து போயினர்.
காதலும் கரைந்து போகும்!



-


23 MAY 2023 AT 7:19

பச்சை வண்ண கதிர்களை
பஞ்சமின்றி வழங்குகிறாய்
கொள்வாரில்லை.
கொண்டவர்க்கோ பேரானந்தம்
தருகிறாய்.
இளைப்பாறுதல் ஈட்டுகிறாய்.
வசந்தகாலமாய் ஓவ்வொரு
வருடமும் வந்து செல்கிறாய்
உன்னை காணவே நானும்
பலதிங்கள் காத்திருப்பேன்
நீ வரும் அந்த ஓர் திங்களுக்காய்.
பச்சை வண்ணமே!
என் உச்சி முதல் பாதம் வரை
குணமாக்கும் வித்தை எங்கு பெற்றாய்?
பார்த்துக்கொண்டே கடந்து
செல்கின்றேன்.
உன் அடுத்த திங்களின்
உருமற்றத்த
கண்டுகொண்டே
நான் நிதமும்.
சிறுபிள்ளை போலவே!

-


5 MAY 2023 AT 15:36

சில நேரங்களில்
உணர்வுகளின் எல்லைகளில்
இசைக்கும் இடம் இல்லை
வாய் திறந்த வார்த்தைக்கும்
வேலை இல்லை
உடல் அசைவுகளும் நகர மறுக்கும்.
கண்ணீரின் துணையிலே
உணர்வுகள் எல்லாம்
உடல்விட்டு காயமாற்றும்.
கண்ணீர் மட்டுமே
இதயபுண் ஆற்றும்.
உறவுகளோ, நட்போ,
உற்ற துணையோ
அர்த்தமற்று நிற்கும்.
'நான்' என்பதே
தனிமையில்நின்று
தன்னை உணரும்.
தனித்து இருப்பது மட்டுமே
உயிரின் சாட்சியாய்
காயங்களின் இளைப்பாறுதலாய்
காலங்கள் கடந்து
கடைத்தெறும்.

-


15 APR 2023 AT 21:45

உன் கிரணங்களை
இங்கு அனுப்பி வை
என் பாதை இருண்டாலும்
உந்தன் ஒளியில்
எந்தன் பயணம் தொடரும்...

-


8 APR 2023 AT 12:20

பங்குனி, சித்திரை
ஆலிலை செந்தளிர்.
பின் பனிக்காலம் முடிந்த
கோடைகால இளவெய்யில்.
தென்திசையிலிருந்து
மாமரம் தழுவி வரும்
மெல்லிய தென்றல்.
நான் கதவை அடைக்கவா
இல்லை அங்கேயே நின்று ரசிக்கவா?
பக்கத்து வீட்டு பலகணியில்
கொத்து கொத்தாய்
பூத்துகுலுங்கும் செம்பருத்தி.
பௌர்ணமியின் மறுநாள் தோன்றும் முழுநிலவு.
விடயற்காலை மைநாக்களின்
கீச்சுக் கதைகள்.
மாலை வேளையின்
செஞ்சுரியன்.
செயற்கை விளக்குகளின்
வெளிச்சம் தீண்டாத
காரிறவு நட்சத்திர கூட்டம்.
இன்னும் பல பல
காதல் கொள்ள,
ஒன்றா இரண்டா?
சொல்லிக்கொண்டே போக
என் பேனாவில்
மை இருக்காது.
காதலை சில சமயங்களில்
எழுதவும் முடியாது .

-


8 APR 2023 AT 12:17

என் காம கசடுகள்
அனைத்தும் உன்
காலடியில் கிடக்கட்டும்.
என் விரக தாபங்கள்
அனைத்தும் உன்
விரல் பட்டதும் எரிந்துபோகட்டும்.
என் அறிவு சுடர் மேலெரிய,
உன் ஒரு சிறு பார்வை
எனக்கு ஞானம் வழங்கட்டும்.
சிவத்துள் சக்தியாய்
சக்தியுள் சிவனுமாய்
நடனமாடி கொண்டிருக்கும்
பேரன்பே
ஞானமே
பெருஞ்ஜோதியே
கசடுகள் நீக்கிடவே
கரம் பற்றிட வா
தாயே!
காளி மா காளியே!

-


5 MAR 2023 AT 16:53

கரம்

தன்னை தான் உதவ மறுக்கும்
அப்பொழுதில்
மெய் வலி மேலோங்கி நிற்கும்
சமயத்தில்,
உடல் தரை தொட்டுவிடாது
உணர்வு தோற்றுவிடாது
இருக பிடிக்க கரம் ஒன்று இருக்கையில்,
அந்த நோடி உயிர் உணர்ந்தது கடவுளின் கரம்.
அவன் பிடியில் இருக்கும் கணம்
வலிகள் பறந்த கணம்.
இருள்கள் கரைந்த நேரம்.
மனமும் உடம்பும் பேரமைதி உணர்ந்த காலம்.
வலிகளும் சிரித்தது
நன்றியும் மேலோங்கி நின்றது.
அவன் எவ்வழியிலும்
வரக்கூடும் என,
அது இறையின்
விசை என,
மீண்டும்
உணர்த்தப்பட்டது.
உயிர் சோதி
ஏற்றப்பட்டது.



-


Fetching Gaana Rupini Quotes