கண்ணாடி...
கண்ணாடி அப்படியேதான் இருக்கிறது அதை பார்க்கும் நான் தான் உடைந்து கிடக்கின்றேன் ...
கீறல்கள் என்று துடைத்து பார்த்தேன் கண்ணாடியை
பின்பு தான் தெரிந்தது அனைத்தும் என் மனக் கீறல்கள் என்று என்று...💔💔💔
-
Love to writting Tamil poems 💌✍️✍️✍️
Whenever my e... read more
காதலிக்க யாருக்கு தான் ஆசை வராது...
மழைத்துளி வந்து சேராதா என மண்ணுக்கு மழை மேல் காதல்
மொட்டுக்கள் பூத்து விடாதா என பூக்கள் மேல் வண்டுகளுக்கு காதல்
தென்றல் தன்னை எப்பொழுது தாலாட்டும் என்று ஜன்னல்களுக்கு ஆசை காதல்
இரவு வந்து விடாதா என நிலவுக்கு காதல்
நிலவு வந்து விடாதா என மனிதர்களுக்கு காதல்..
முடிவில்லா காதலுக்கு முற்றுப்புள்ளி காதல் செய்ய ஆசைப்படுகிறது...❤️
-
நொடிக்கு நொடி மாறும் என் சிந்தனையில் நீ மட்டும் எப்படி நீங்கா இடம் பிடித்தாய்...
என் சிந்தனையும் சிறைப்பட்டு கிடக்கிறது இன்று உன்னால் அமைதியாக..!!!
-
.....தவிப்பு.....
ஏங்கி தவிக்கும் இதயத்தின் வலி ஒரு போதும் ஏங்க வைத்தவர்களுக்கு தெரியாது...
அவர்களும் ஏங்கி தவிக்கும் போது தான் ஏக்கத்தின் கசப்பான உண்மை புரியும்..!!
-
மெத்தையில் இலவம் பஞ்சு தலையணை எத்தனை இருந்தாலும்...
எனது வலது கையின் மேல் தலை சாய்த்து உறங்கும் சுகத்தை ஒருபோதும் அது தந்ததே இல்லை...-
உன் உடனான உறவை நான் தொடரப்போவதில்லை...
ஆனால் உன்னுடன் வாழ்ந்த அந்த நாட்களின் நினைவுக்குள் மட்டும் சென்று ஒரு நாள் வாழ ஆசைப்படுகிறேன்..!
ஏன் என்றால் நினைவுகள் ஒருபோதும் என்னை ஏமாற்றியது இல்லை..!!!
-
இன்பம் துன்பம்...
யாருடைய இன்பத்திலும் துன்பத்திலும் நான் பங்கேற்க போவது இல்லை...
துன்பத்தை பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுபவர்கள் இங்கு இன்பத்தை பகிர்ந்து கொள்ள நினைப்பது கூட இல்லை...!!-
காயத்திற்கு மருந்திட்டு ஆற்றி விடலாம்... ஆனால்.!
காயத்திற்கு காரணமானவர்களை ஒருபோதும் மருந்திட்டு மாற்றி விட முடியாது..!
காலமே அவர்களை மாற்றும் அரு மருந்தாகும் அது வரை காத்திருக்க தான் வேண்டும்...-
பல நேரங்களில் நான் ஏன் வளர்ந்து விட்டேன் என்றும்...
சில நேரங்களில் நான் ஏன் பிறந்து விட்டேன் என்றும் தோன்றுகின்றது...
சில கசப்பான காரணங்களால்..!!!
-
ஒருவர்க்கு ஒருத்தர் தான் என்று
இந்த உலகம் சொன்னதை நம்பி
நான் மட்டுமே ஏமாற்றம் அடைந்தேனா இல்லை நீங்களுமா...?
-