காற்று வீசிக் கலையும் மேகம் போல எங்கோ ஓர் இடம் தங்கிவிட்ட காதலுக்கென்று ஒரு கவிதை சொல்ல காத்திருந்த தருணங்களெல்லாம் காலத்தால் அழித்து விட வான்குருவி தேடி வருகிறது பிரிந்த அந்த மேகங்களை
என் தலை கோதும் விரல் தேடி ஏங்கும் இரவெல்லாம் தவறாமல் கன்னம் நனைக்கும் கண்ணீர்த்துளி சொல்கிறது தலை கோதிய விரல் மட்டுமல்ல என் பசியாற்றிய கரத்தையும் கனல் கொண்டு போன கதையை