கொல்லாமல் கொல்லும்
உயிர் கொல்லி
நோயால்
உறங்காமல் தவிக்கும்
உதிரத்துடிப்பு
நீயாய்
காணாமல் துடிக்கும்
இருவிழி தொலைநோக்கி
நீயாய்
கண்டால் உயிர் பெறும்
என் காதல் நீயே-
கவிதை உள்ளத்து உணர்வுகளை
பிறருக்கு எடுத்துக்காட்ட. உதவ... read more
முடிவுக்கு வந்து
முற்றுப்புள்ளி வைத்து
விடுகிறது
இரவு எனும் இருளில்
இரவில் தான்
எனது நினைவும்
உணக்கு தோற்றி
என்னை இம்சை
செய்க வந்துவிடுகிறாய்
நீயே-
இல்லாத ஒன்றுக்காக
காத்திருக்கும் இதயத்துக்கு
ஒளியின் தோன்றும்
காட்சிக்கு மனம் எனும் தந்த
மலர்தான் இதுவும்-
கடந்து சென்ற காலத்தின்
வாழ்கைக்கு
இன்னும் அர்த்தங்கள்
தெரியவில்லை
கடந்து வரும் காலத்தின்
கோலத்தில்
அர்த்தமுள்ள விடையம்
கிடைக்குமா
என்றுமா என்றும் புரியவில்லை
-
நீ இல்லா போது தேடும்
என் விழியும்
நீ தந்த வரிகளுக்கு நான்
மறுத்த மொழியும்
உனை காணாத போது
என் இதயம்
துடிக்கும் வழியும்
உனை கண்டவுடன் என்
முகம் மலரும்
மகிழ்ச்சியும்
ஆனால் எணக்காக நீ இல்லை
உன்னை மறக்கும் என்
நினைவுகள்
இல்லை-
கட்டிக்கொண்டு கடந்த
காலங்கள்
ஒட்டிக்கொண்டு கடந்த
காலங்கள்
கலைந்து இப்போது என்
தனிமையின்
நினைவில் உன்னோடு
கற்பனையில்
காலங்கள் கடந்து செல்கிறது-
ஒன்னுமே புரியா உலகில்
உணக்கு நான்
எணக்கு நீயெல்லாம் என்று
நான் சுமந்த
நினைவுகள் கனவுகள்
கற்பனைகள்
யாவும்
இன்றுவரையும் கலைந்து
போனது
தனிமையில் தவித்து நினைவுகள்
வரும்போது உயிர் இல்லா
ஓவியம் நான் இங்கே-
மண்ணில் சாய்ந்து
மனம்
விட்டு பேசிய வார்தைக்கு
வான் தந்த
சாட்சி இதுவே
கலங்கும் விழிகளுக்கு இப்போதும்
ஆறுதல் தருகிறது மௌனமாய் அதான்
வெளிச்சத்தில்
மீண்டும் வந்துவிடு எனை
தேடி உணக்காக
நான் எப்போதுமே
💘💘💘💘💘-
காலங்கள் கடந்து
செல்கிறது
மௌனங்கள் குறையாமல்
நிமிடங்கள்
அறியவில்லை மனம்
படும்
வேதனையை
மாற்றங்கள் தேடி செல்ல
புதிதாக
பயணங்கள் தேவை-