இணைபிரியா இறுமாப்பில்,
இரு முகம் காட்டுகிறது வெண்ணிலவு!
இருண்ட வானமோ இழுத்தணைக்க,
மருண்ட நிலவோ பின் மயங்கி முகம் மூட,
பார்த்த எனக்கோ பாவை உன் நினைவே கனக்க,
பிச்சை கேட்கும் நிலையில் நான் இருக்க,
துச்சமென தூக்கி போட்டு,
தூசி தட்டிவிட்டு போகிறாய் நீ!
துடி துடித்து அடங்குகிறது
உன்னிடம் அடிமையான என் காதல் !
அடிமையாவதும் , அடிபணிவதும் ,
ஆள்வதும், ஆட்கொள்வதும்,
அகிலம் வென்ற இந்தக் காதல் தான் என
நீ அறிந்து கொள்வது என்றோ ?
(எஸ். ஜோ வின் “என் பிரபஞ்சத்தினை நிறைத்துக் கொள்ளும் காதல் நீ !” )
நாவலிலிருந்து)
-