நாடக காதல் என
நாளெல்லாம் கூவி
நாடகத்தை நடத்தி
நாலு துண்டாய் அவனை
நாசமாக்கி தூக்கி எறிந்தனர்.
அடுத்த நாள்,
அந்த சாதி கட்சி தலைவர்
ஒரு கூட்டத்தில்,
இன்றைக்கு யாரும் சாதி பார்ப்பதில்லை
எனக்கூறி கைத்தட்டல் வாங்கினார்.-
ஆண்-ணவம்
அண்ணா நகர் சிக்னலில்,
கம்பீரமான வெளிநாட்டு இரும்பு குதிரையை
முறுக்கிக் கொண்டிருந்தபோது,
எதிர்பக்கம் மெதுவாய் வந்த ஸ்கூட்டர்
நிலைத்தடுமாறி சாய,
இதைக் கண்ட அவன் அது
அவளென்றதும் ஏளனமாய் சிரிக்க,
பச்சை ஒளி வழிகாட்டியதும்
மின்னல் வேகத்தில் பறந்த அவன்,
சாலை ஓரத்தில் சிவனேன்னுக் கிடந்த
லாரியில் பாய்ந்து சிதைந்தான், பாவம்.
அவனது ஆண்-ணவத்தை தலைக்கவசம்
காக்காமல் போனதே சோகம்.-
காதலியிடம் பேசியவனின்
தலையை சூறையாடிய
அரக்கனை தலைவன் என கொண்டாடும் தற்குறிகளே,
நீங்கள் சாதி நோயில்
மூழ்கி மாய வாழ்த்துக்கள்.-
"இப்போ எல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறா"
என சொல்லித்திரியும் அறிவாளிகளே,
தயவுசெய்து தினமும் செய்தி பாருங்கள்.-
பள்ளிப் பருவத்தில்,
முகத்தில் மயிர் வளர்க்க
இது வயதில்லை என்பார்,
கல்லூரி பருவத்தில்,
முகத்தில் மயிர் வளர்த்தால்
அடங்காத பிள்ளை என்பார்,
சம்பாதிக்கும் வயதில்,
முகத்தில் மயிர் வளர்த்தால்
தறுதலை போக்கிரி என்பார்.
சமூகமே,
ஆண் முகத்தில் வளரும் மயிர்
அசிங்கம் பிழை என்றால்,
நீங்கள் கும்பிடும் கடவுள்
முட்டாளாய் போகாதோ?-
தென்னாட்டில் இருக்கும் என் அன்பு தலைவிக்கு ,
வடநாட்டில் இருக்கும் உன் அன்பு தலைவன் எழுதுவது,
நிகழ்காலத்தில்
நாம் இருவருக்கும் பொதுவாய் தோன்றும்
ஒரே பொருள் மதியாய் போனது.
இரவு தினமும் அந்த மதியின் வழியில்
உன் முகம் கண்டு நான் தவிப்பது
அங்கு உனக்கு தெரிகிறதா?-
அனல் சூழ்ந்த சித்திரை இரவில்
அவளும் நானும் மதியின் காவலோடு கதை பாடிக் கொண்டிருந்தோம்.
திடீரென்று மார்கழி மாத குளிர் காற்று எட்டிப் பார்த்தது,
அதற்கு எம் அருகில் இருந்த முல்லைக்கொடியும்
அதன் மொட்டுகளுமே சாட்சி.
என் இரு விழி ஒரு நொடி தூங்கி எழுவதற்கு முன்,
என் கன்னத்தை உரசியது அவள் உதடு.
காவலுக்கு வந்த மதியோ,
வெட்கத்தால் மறைந்தோடியது.-
நீதி...
எது நீதி?
ஒரு கோடி பேருக்கு
ஒருவன் செய்யும் செயலில்
பிடித்தம் இல்லாமல் போயின்
அது தவறாய் மாறுவதே
இங்கு நீதி.-
விமானம்...
அன்று,
அரை டவுசர் அணிந்து,
நண்பர்களுடன் மிதிவண்டியை மிதித்து உலாவிய நாட்களில்,
தலைக்கு மேல் பறக்கும் விமானத்தை பார்த்தபோதெல்லாம்,
வீட்டிலிருந்து தொலைவில் அதில் பறந்து செல்ல ஆசை வந்தது.
இன்று,
மீசை தாடி கருவளையங்கள் கொண்ட முகத்தோடு,
புத்தகப் பையை விட கனமான பொறுப்பை சுமந்து செல்லும் வழியில்,
தலைக்கு மேல் பறந்த ஒரு விமானத்தை பார்த்தேன்,
தொலைவில் இருக்கும் வீட்டிற்கு அதில் பறந்து செல்ல ஆசை வந்தது.-