காலம் மாறினாலும் ......
காதல் மாறாமல்....
உனக்காக இங்கு நான்❤️....-
இன்றும் நீ வருவாய்
என இமை மூடாமல்....
வழிமீது விழி வைத்து
காத்திருக்கிறேன்.......
என்னவனே உனக்காக......-
நீ வருவாய் என
காத்திருப்பது ஏமாற்றம்......
தெரிந்தும்.......
ஏமாற துணிந்த
என்னை நிஜமாக
ஏமாற்றாதே......
-
உன் இரு கைகள்
என்னை அனைத்து நிற்க......
இரு விழிகளும்
உன்னை அசையாமல் பார்க்க........
கனவெங்கும்
நீ மட்டும் நிறைந்தாயடா......-
நிற்காமல் ஓடும் உன் கால்களை வியக்கிறேன்........
கண்களில் அன்பை மட்டும் சுமக்கிறாய்......
ஓயாமல் பிறந்த குழந்தையாக சிரிக்கிறாய்......
சுற்றியுள்ள யாரயும் வெறுக்காத மனம்......
எனக்காக நிற்கின்ற உனக்காக இது......
முழுதும் ஏற்க முடியாமல் , இங்கு நான்!
அன்பின் அர்த்தமரியா என்னை,அரவணைத்தாய்.....
கோபம் மட்டுமே காப்பாற்றும் என்னை,ஏற்றுக்கொண்டாய்......
ஆண்களை வெறுத்த என்னை, மதித்தாய்.......
எனது எண்ணங்களை பொய்யாக்கினாய்......
நீ யாரென்ற தெரியாத போதும் , புரிகின்றாய்.....
நட்பாகவோ,காதலாகவோ.....உன் அன்னையாக நான்.......
என்றும் உன்னை பாதுகாப்பேன்....
-
கண் இமை அசைவில் உன்னை புரிந்துகொள்ளும் நான்.....
உன்னால் இன்று புரியாத துயரத்தில் நிற்கின்றேன்....
கைகள் இரண்டும் கோர்த்து, கால்கள் நடைகள் ஆயிரம் போட்டது அன்று...
ஆயிரம் கூச்சல்கள் நடுவிலும் உன் வார்த்தைகள் கேட்டது எனக்கு....
உன்னை கண்ட நாள் முதல் இன்று வரை
ஓயாமல் வேலை செய்கிறது என் இதயம் உனக்காக
நாட்கள் நூறு தாண்டியும் இன்னும் தாண்டவில்லை உன் நினைவை
என் மனது ....
நாள் தவறாமல் உன்னை ரசித்த கண்கள் இன்று, நொடிகள் பல கடந்தும் காத்திருக்கிறது ..
நேசம் மாறினாலும் இன்றும் மனதில் புதைந்த
உன் வாசம்.
தெருவின் ஓரங்களில் இருக்கும் கடைகளில்
உன் பெயர்.....
காலை கண்விழித்து பார்த்ததும் இரு விழி இடையில்
உன் பிம்பம்....
காலங்கள் பல மாறினாலும்
மாறாமல் நிற்கிறது.
உனக்காக காத்திருப்பின் வலி
-ஷர்மிளா-
நீ வேண்டாம் என்பதற்கு
ஆயிரம் காரணங்கள் கண்முன்
நின்றாலும்..........
உன் 'காதல்' ஓன்று போதும்
உன் நினைவுகளை நான்
சுமந்து நிற்க .......-
நீ உயரம் தொட வேண்டி
நான் தொலைந்தேன்......
நீ வெறுத்த என் இதயம்
இன்னும் நம்புகின்றது....
தொலைந்த என்னை மீட்க
நீ வருவாய் என....-
ஒரு கடிதம்.....
அன்பானவனே இது உனக்காக ✨️
மீண்டும் பழைய நாட்களுக்காக.....
உன் பெயர் கூட தெரியாத அந்த நாளுக்காக......
உன் முக ஜாடயை கூட அறியாத
நாளுக்காக......
உன் புன்னகைக்கு அர்த்தம் புரியாத
நாளுக்காக......
காலம் கடந்த கவலை எனக்குள்😖
அறியாத வயதில் புரியாமல் செய்த
தவறில்லை நீ.....
மணம் உருகி மனதில் கணத்தை
ஏந்தினேன் உனக்காக....❤️
என்னவனே என் ஆயுள் முழுமையாக
உனக்காக.....👑
-
கடிகாரத்தின் முற்கள்
மிக அப்பாவி......
நாம் சந்திக்கும்
நாட்களை எண்ணி.......
ஓடிக்கொண்டே
இருக்கிறது....❤️-