மஞ்சள் பூசிய வானின் வசீகரம் எனை ஈர்க்கிறது; புதிரான என் மனம் புன்னகை பூக்கிறது; வண்ணத்து பூச்சிகளின் வண்ணங்களை சற்று கடன் வாங்கி - மேல் நோக்கி தெளித்து மெல்லிய உடல் மெய்சிலிர்க்க ஆசை தான், ஆசை மட்டும் தான்..!
அவள் பார்வைப்படும் சுகம் போதும் இவனுக்கு சொர்கத்தை உணர்ந்திட, அவள் கைரேகைகள் போதும் இவன் தன் துயரங்களை புதைத்திட, அவள் கடந்த போதும் நிழல் போதும் அவன் நிஜமென வாழ்ந்திட, எங்கும் எதிலும் அவள் பிம்பம் போதும் இவனுக்கு; வாழ்நாள் முழுதும் வாகை சூடி வெற்றிக்குதூகலமிட!
பெண்ணே, போலியான மனிதர்கள், போலியான உருவங்கள், போலியான அடையாளங்கள், கொண்டு உன்னை போலியாக்க ; முடிந்தால் காலியாக்க துடிக்கும் மனித பதர்கள் இவர்கள், கலங்காதே - காலம் கை கொடுக்கும் - காற்றில் ஏற்றி அழகு பார்க்கும் - உன்னை நீ நம்பு போதும்!
உள்ளுக்குள் பிறக்கும் உணர்வுக்கு அவன் பெயர் வைக்கும் முன்னே - பெயர் வைத்த சமூகம், காயங்கள் தந்து, கனவுகளை உடைத்து சிறகுகளை பிடுங்கி எறிந்தது; காலமே பதிலாய் - வா! காத்திருக்கும் இரு நெஞ்சங்களுக்கு, அவள் அறிந்த எதுவும் அவன் அறியாதது, அவன் அறிந்த எதுவும் அவள் அறியாதது!🦋
அவன் விரல்கள் பிடிக்கும் பேனாவாய் பிறக்கும் வரம் வேண்டி நிற்கிறேன், மறுஜென்மம் வேண்டும் அதற்காகவேணும் - எனக்கும் என்னில் இருக்கும் உனக்கும்❣️ 🦋(நா. முத்துக்குமார் )
இவள் ஒரு தொடர்கதை என்றார்கள் - எங்கும் நில்லா விண்மீன் என்றார்கள் - எதிலும் வீழாத வானவில் என்றார்கள் - எதற்கும் கலங்காத காதல் கடல் என்றார்கள் - எல்லாம் நீங்களே சொல்லிவிட்டீர்கள் இனி நான் என்ன சொல்ல,ஆம் நான் அப்படித்தான்; தீரா பொய் புன்னகையோடு!