Divnagajo DNJ   (Divnagajo)
492 Followers · 2 Following

Joined 4 October 2019


Joined 4 October 2019
12 APR AT 19:50

அத்தனை பேரழகு கொண்ட
சிவந்த மேனி கொண்ட
செங்கதிரோனே..
உன் பார்வை காதலாய்
இருந்தாலும் அனலாய்
கொட்டி தீர்க்கிறாய்
என்று தானே...
எனை மறைத்துக்கொள்ள
குடையுடன் வந்தேன்..
இன்று என்ன கோபமோ
காற்றடித்து என் குடையை
பறித்து விட்டு அனல் இன்று
ஆச்சரியமாய் குளிர்ந்த
காற்றே என்னில் அனுப்பியது..

-


11 APR AT 11:34

காரிக்கிழமையில்
கேசம் அலம்பி
குளம்பி அருந்தும்
கைதல் பழம்
போன்றவனே..
உன்னை கண்டதும்
யான் தள்ளியே
நிற்கின்றேனடா..
தவிக்கும் இம்மனதால்..

-


10 APR AT 10:11

காரிக்கிழமையில்
கேசம் அலம்பி
குளம்பி அருந்தும்
கைதல் பழம்
போன்றவளே..
உன்னை கண்டதும்
யான் தள்ளியே
நிற்கின்றேனடி..
தவிக்கும் இம்மனதால்..

-


10 APR AT 9:59

இந்த காதல் என்ன செய்யும்..!!?
இதயத்தை ...
அழுத்தி பிடிக்கும் ஒரு அழகிய தருணத்தை தராமல் இருந்தால் என்ன...!!?

-


10 APR AT 6:13

உன் காதலில் திளைத்து
மூழ்காமல் காத்துக்கொள்ள..

ஆறுதல் வேண்டி மீண்டும்
உம் கவி வரிகளையே தேடி
துலாவுகிறது...

உம் காதல்
ஆழிப்பேரலையில் மாட்டிக்
கொண்டவள் .. தற்போது
ஆழ்கடலில் மூழ்கி
கொண்டிருக்கிறேன்..

மீண்டும் என்னை ஆறுதல்
படுத்த உன்னை அழைக்க மாட்டேன்..

ஆனாலும்
தானாகவே என் தலை
சாய்த்துக்கொள்ளும்
உம் அன்பின் மடி..

-


10 APR AT 6:07

உன் காதலில் திளைத்து
மூழ்காமல் காத்துக்கொள்ள..

ஆறுதல் வேண்டி மீண்டும்
உம் கவி வரிகளையே தேடி
துலாவுகிறது...

உம் காதல்
ஆழிப்பேரலையில் மாட்டிக்
கொண்டவள் .. தற்போது
ஆழ்கடலில் மூழ்கி
கொண்டிருக்கிறேன்..

மீண்டும் என்னை ஆறுதல்
படுத்த உன்னை அழைக்க மாட்டேன்..

தானாகவே என் தலை
சாய்த்துக்கொள்ளும்
உம் மடி

-


7 APR AT 8:29

உன்னை வீழ்த்த யாருமில்லை..

உன்னை வீழ்த்த யாருமில்லை
என நொடிக்கு ஒருமுறை உரைத்து கொண்டே இரு..

மற்றவர்கள் கேட்கும் வரை அல்ல..
உன் ஆழ்மனது அழுத்தி உனக்கு கூறும் வரை..

விதி என்று சொல்பவர்களிடம்.,
இல்லையென விளையாட்டுக்கு
கூட
சிரித்து விடாதே..
உன் மதியை சில்லரையாக்கி
சிதைத்து விடுவார்கள்..

இக்கணம் நிமிர்ந்து நடைபோடு..
நிமிடங்கள்
நிஜங்களை உனக்கு
எடுத்து காட்டி செல்லும்..

-


21 MAR AT 18:11

கவிதை தின நாளில்
தங்களுக்காய் கவிதை
படைப்பதில்..
ஆனந்தம் என்பதை விட
பேரானந்தமே..

கவிதை வடிவில் உமக்காக
ஒருசில வரிகள்..
முழுமையும் படைக்க
இயலாது..
எண்ணிலடங்கா உம்
செய்கைகள்..
ஏராளம்..

அவற்றில் சில

👇🏻👇🏻

-


23 FEB AT 15:04

நாம் கையோடு கை சேர்த்துக்
கொள்ளும் காலம் எப்போது..?

இவ்வோடையே சாட்சியாக
இந்நிலவையே சாட்சியாக
இந்த மரநிழலையே சாட்சியாக..
எனக்குள் நீ விதைத்த காதல்
முத்துகள் விலைமதிப்பின்றியே
இன்னும் விளைந்து நிற்கிறது..

எதிர் காற்றாக வந்து சாய்த்தாலும்
நாணலாக வளைந்து நிமிர்ந்து
நிற்பது தான் நம் காதலோ..

-


31 JAN AT 8:20

அந்த கண்சிமிட்டல்கள்
தொடர்ந்து நீளட்டும்..
உன் சிகை நழுவல் தொடரட்டும்..
என் கரந்தீண்டல் நெருப்பின்
சுவையை அறிந்தாலும்...
அப்படியே பற்றட்டும்..
நம்மில் அந்த நிமிடமுள்ளும்
மணிமுள்ளும் அவசர விடுப்பு
எடுக்கட்டும்..
இப்படியே இந்த கணமே..
தொடரட்டும் நம் ஜென்மங்கள்

-


Fetching Divnagajo DNJ Quotes