முத்தமழை கொட்டி தீர்ந்தது
கண்விழித்தேன்..
கனவு தானோ என்று..
கள்வன் கணக்கில்லாமல்
கொட்டித் தீர்த்துக்
கொண்டிருக்கிறான்
என் அருகில் அமர்ந்து ..!!-
வாழ்வு தொலைந்த நேரம்
வாழ்க்கை நெருப்பாய் சுட்டது...
அனல் குளிராய் மாறியது போய்..
குளிர் அனலாய் மாறியது..😅-
இரு கடைக்கண் பார்வையும்
ஓர் சேர் நெருங்கிய தருணம்..
பனிமழை பொழிந்திட
பாவை அவளோ பார்வை வீசி
செல்கிறாள்..
என்னில் ஒரு மின்னலாய்..-
நேற்று நான் தொலைத்த..
காதல் என்ன அத்தனை இக்கட்டான சூழ்நிலையா..
இல்லை இல்லை இந்த காதலை விட
இந்த அன்பு தான் அத்தனை பாடு
படுத்துகிறது..🥳
-
உன்னை கண்டதும் கட்டிக் கொண்ட
என் கண்களையும்..
அதே நேரம் பிதற்றல் கொள்ளும் என் நாவினையும்
திட்டித்தீர்க்கவா..?
இல்லை கட்டி அனைக்கவா..!
-
என் உலகம் அவன் என்பதை
யான் சொல்லாமலே அவன்
அறிவான்..
அவன் வாய்மொழியே
எந்தன் வாழ்க்கையாய்
யான் சூடிக்கொண்டதை..
இன்னும் அறியாமலா
இருந்திருப்பான்..
இன்னும் யான் யாது
செய்ய வேண்டும்..
தூது அனுப்பு..
என் துணையாய் நின்று..!
-
இறுக பற்றிய கரம்
இனி எதற்கும் பிரிவதில்லை
என்ற போதும்..
பிரிவு நிரந்தரம் ஆனது..!!
சார்ந்தவன் நிரந்தரம்
இல்லையென்றாலும்
சான்றுகள் நிரந்தரம் தானே..!-
உன்னை சிந்திக்க இயலாத நேரம் எல்லாம் உன் சிந்தனையே என்னில் இயங்கி கொண்டிருக்கிறது...
கள்வனே..🥳-