உன்னை வீழ்த்த யாருமில்லை..
உன்னை வீழ்த்த யாருமில்லை
என நொடிக்கு ஒருமுறை உரைத்து கொண்டே இரு..
மற்றவர்கள் கேட்கும் வரை அல்ல..
உன் ஆழ்மனது அழுத்தி உனக்கு கூறும் வரை..
விதி என்று சொல்பவர்களிடம்.,
இல்லையென விளையாட்டுக்கு
கூட
சிரித்து விடாதே..
உன் மதியை சில்லரையாக்கி
சிதைத்து விடுவார்கள்..
இக்கணம் நிமிர்ந்து நடைபோடு..
நிமிடங்கள்
நிஜங்களை உனக்கு
எடுத்து காட்டி செல்லும்..
-