ஓர் அழகான விடியல் என்பது தூக்கத்தில் எழுப்பி உன் கலைந்த குரல் கேட்டு உனக்கான காத்திருப்பு உன் முகம் காணுதல் உன் முதல் அணைப்பு உன் முதல் முத்தத்தில் தொட்டு நிற்பதா அன்றி தொடங்குவதா என்ற குழப்பத்தில் இருப்பது தான்....!
முத்தமிட்டு என்னை சாம்பலாக்கி கொடுத்து விட்டு துவண்டு விழும் பூக்களாக உன் கண்களை மாற்றிக்கொள்ளும் தருணத்தில் கொலை வாள் நீட்டி மன்னித்து காட்டிய வழியில் எவ்வித இலக்குமின்றி பயணிக்கிறேன்...!
சந்தன கிளைகளில் ஊடுருவுவதை போல் சந்தோசக் கடலுக்குள் மொத்தமாய் மூழ்கும் வாழ்க்கைக்கான வாய்ப்பு உமக்கு கிடைக்காவிட்டாலும்... சங்கடங்கள் தான் கிடைத்திருப்பினும்... கள்ளிச்செடியை போல் ஒரு வாழ்க்கை தான் உமக்கு அமைந்திருப்பினும்... அதிலிருக்கும் முட்களையும் காதலிக்க கற்றுக்கொண்டால் நாம் வாழும் வாழ்க்கை இனிமையானதே!!!💕💕