கூடல்
முடிந்திடப்
போகிறதென்று
நினைத்த நேரத்தில்
என் மார்பில் துளிர்க்கும்
வியர்வைத்துளிகளை
உன் மூச்சுக்காற்றுக்
கொண்டு
உலர்த்தி விட்டுக்
காதல் மொழி
நீ பேசும்போது
'இன்னும் வேண்டுமென்று'
இதமாக தொடங்கி வைக்கிறாய்
நம் காதல் பயணத்தை....!!!
-
உன் வருகையை
எதிர்ப்பார்த்து
காத்திருக்கும்
நேரத்தில்
என் தோட்டத்தில்
கவிமழை
பொழிவதும்
பொய்ப்பதும்
உன் கூந்தலில்
பூத்திருக்கும்
'பூ' வை
பொருத்துத்தான்...!!-
ஏதோ!
என்னிடம் பேச வந்து
பேச முடியாமல் பேசிய
'முதல் கவிதை' யை
ஒளித்து வைத்தேன்
என் இதயத்துடிப்பில்...!!-
மூன்று முத்தம்
வேண்டுமென
இமைகளை
மூடிக்கொண்டு
அவள் முரண்டு
பிடிக்கும்போதெல்லாம்
உணர்த்துகிறாள்....
அவளின் எல்லாமும்
நானென்பதையும்
எனக்கானவளின்
காதல் சாயலையும்..!!!-
கடந்து செல்லும் போது
காற்றில் தவழ்ந்து
என்னைத் தொட்ட
உந்தன் தாவணி....
அந்த இதமான உணர்வை
மறைத்து வைத்தேன்
என் உணர்வு நரம்பில்!!!!-
அவ்வளவு புரிதல்!
அவ்வளவு அன்பு!
அவ்வளவு கனிவு!
இருந்தும்
சரியான நீ!
தவறான நேரம்...!-
உன் விழி போதும்,
என் மீது பழி சுமத்த
காதல் மொழி பேசியதை..!-
ஓர் அழகான
விடியல் என்பது
தூக்கத்தில் எழுப்பி
உன் கலைந்த குரல் கேட்டு
உனக்கான காத்திருப்பு
உன் முகம் காணுதல்
உன் முதல் அணைப்பு
உன் முதல் முத்தத்தில்
தொட்டு நிற்பதா அன்றி
தொடங்குவதா என்ற
குழப்பத்தில் இருப்பது தான்....!-
இதயத்தின்
காயங்கள் எல்லாம்
இருளில் தான்
முழுமையாக
திறக்கின்றது...!!!
இருட்டில் வேஷத்தை
கலைப்பதைத் தவிர
வேறு வழியில்லை!!!
-
முகத்தில்
சரிகிறது கூந்தல்
அலட்சியமாக
ஒதுக்குகிறாய் நீ...
மீண்டும் சரிகிறது
மீண்டும் ஒதுக்குகிறாய்...
ஒளியும் இருளும்
பிரபஞ்சக் கூத்தின்
சிறிய வடிவமாகவே
தோன்றுகின்றது
அது எனக்கு...!!!-