Dinakaran p   (பா.தினகரன்)
23 Followers · 27 Following

Karuppu kavingan..... Maatrathin vedhai naan 🌞
Joined 22 February 2019


Karuppu kavingan..... Maatrathin vedhai naan 🌞
Joined 22 February 2019
17 OCT 2022 AT 7:09

தனிமையை வெறுக்கிறேன்....
ஆனால்
தனிமையில் இருக்கிறேன்!
காதலில் இருக்கிறேன்....
அதனால்
காதலை வெறுக்கிறேன்!
சோகத்தை மறைக்கிறேன்....
ஆனால்
சோகத்தில் திழைக்கிறேன்!
பதில்களை வெறுக்கிறேன்....
அதனால்
கேள்விகள் மறுக்கிறேன்!
கண்ணீரையும் வெறுக்கிறேன்....
ஆனால்
கண்ணீரிலே மிதக்கிறேன்!
துயரத்தில் இருக்கிறேன்....
அதனால்
தூக்கத்தை மறக்கிறேன்!
மோகத்தையும் வெறுக்கிறேன்....
ஆனால்
அவள் மோகத்தில் உறைகிறேன்!
உணர்விலே இருக்கிறேன்....
ஆனால்
உறவுகள் வெறுக்கிறேன்!
மௌனத்தை வெறுக்கிறேன்....
ஆனால்
மௌனமாய் நிற்கிறேன்!
பிழைகளை வெறுக்கிறேன்....
ஆனால்
பிழையாகி‌ நிற்கிறேன்!

இப்படிக்கு
வண்ணமற்ற..........
வண்ணத்துப்பூச்சி!!!

-


7 MAY 2022 AT 5:40

என்னை தூங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு....
அவள் மட்டும் தூங்க தொடங்கிவிட்டாள்.....
உருவமாய் என் மடியிலும்....
உயிராய் என் உள்ளத்திலும்...
இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தவள்...
இரண்டு நிமிடத்தில் தூங்கிவிட்டாள்....
அவ்வளவு கலைத்துவிட்டாளோ.,
என்னிடத்தில் அவள் அன்பை
பொழிந்து பொழிந்து.....
இருண்ட வானமும்
இறைவனிடம் வழி கேட்டு
கீழே வந்துவிடும் போல்.......
அவள் உறங்கும் அழகை ரசிக்க.....
ரகசியமாய் என்னிடம் மட்டும்
கனவில் வந்து கதைத்துக் கொண்டிருக்கிறாள்.....
காதலனும், கனவும், காதலியும்!

-


8 MAR 2022 AT 19:04

பெண்ணியம்
பெண்ணியம் பேசும்🗣️ உதடுகளெல்லாம்
கண்ணியம்🎀 காப்பது இல்லை!😐
உருவத்தை💃 உற்று-நோக்குபவர்கள்👁️ எல்லாம்
உன் உள்ளம் நோக்குவது இல்லை!😐
உங்களுக்கு, அறிவும், ஆற்றலும், அழகும்
கொடுத்த கடவுளும்🕉️ கன்ஜன் தான்
உங்களின் சுதந்திரத்தை🚩 மட்டும்
ஆண்களிடத்தில்🏴‍☠️ கொடுத்துவிட்டான்!🙃
சாமானியம்🚺 முதல்....
சட்டங்கள்⚖️ வரை....
உங்களின் பங்கு சாலச்சிறந்ததே!!!💯
வயல்வெளி🌾 முதல்....
விண்வெளி🚀 வரை....
உங்கள் பாதங்களின்👣 படிவங்கள்தான்!!!🔆
போராட்டமே⚓ உங்கள் வாழ்க்கை ஆகிவிட்டது...!
அதனால்,
உங்களின் சுதந்திரத்திற்காகவும்🗽
போராடித்தான்🥷 பாருங்களேன்!!!
கலைகள்🎯 கற்றிடு...
பட்டங்கள்🎓 பெற்றிடு....
பகுத்தறிவு🤔 கொண்டிரு....
பட்டாம்பூச்சியாய்🦋 பறந்திடு....
இருந்தும்.....
உங்களை தாக்கிட....
கழுகுகள்🦅 சில காத்திருக்கும்
அதனால்,
சற்று கவணத்தோடே பறந்திடு🦋🦋...!!!
பெண்மை🧚 என்ற வலிமைக்கு💪
மகளிர் தின வாழ்த்துக்கள்!!!🤝

-


16 MAY 2020 AT 11:12

கண்ணீர் விவசாயி

நிலத்தை உரிஞ்ச
நீவீர் கண்ட புதுமை.....
நாற்றங்காள் தண்ணீர் 🌧
நடவுக்கு இல்லை!!!
நான் செய்த பயிா்கள்🌾
நஞ்சாகத்🕸 தானோ....
பூச்சி🐛கொள்ளி📌
கொடுத்தாய்...... எனக்கு...!!!
நட்டதெல்லாம்🌱 போக...
நாட்டம் மட்டும் நிக்குதே!!!😔
நானும் தானே உழைத்தேன்👳
ஆனால்.....
ஊதியம்💰 எனக்கில்லையோ!!!😐
அகண்ட வானம்⛅ அழவில்லை....💧
நானோ இங்கே அழுகின்றேன்😪
ஆத்தாவுக்கு கூழ்🍯 ஊத்த....
அரிசிகூட🌾 என்கிட்ட இல்ல....!!!
ஆலமரத்து நிழலுகூட....🌳
நின்னுடிச்சி...!!!
நிலத்தடி நீர அந்த சூரியன்...🌞
தின்னுடிச்சி...!!!

- பா.தினகரன்

-


10 MAY 2020 AT 14:20

உச்சி வெயில் உடம்பில் இறங்க...
உன் முந்தானையால் எனை மறைத்தாய்.!
முத்தாய் எனை மாற்றி...
சிப்பி என நீ காத்தாய்.!

அம்மா...!!!
திருவிழாக்களை பார்க்கும்போதெல்லாம் உன் ஞாபகம்.!
உனை தொலைத்து அழுத அந்த நாட்களை
மீண்டும் என்னிடம் சேர்க்க வேண்டி.!

அம்மா...!!!
மீண்டும் உன் மடியில் உறங்க ஆசை...
உன் சுட்டி குழந்தையாக.!

சிலமுறை நான் அழுததுண்டு...
பாசத்தை உன்னிடம் காட்டத்தெரியாமல்.!
பலமுறை நான் நெகிழ்ந்ததுண்டு...
உன்னைப் போல் பாசத்தைக் காட்டத்தெரியாமல்.!

அம்மா...!!!
நான் நாத்திகவாதி தான்...
ஆனால்...
உனை வணங்கும்போது மட்டும்
ஆத்திகன் ஆகிறேன்.!

பெண்மை ஓர் வரம் என்பார்கள்....
அப்பெண்மையில் தாய்மை தனி வரமே.!!!

-


18 NOV 2019 AT 17:17

உன் விழி பேசும் வார்த்தைகள்....
மௌனத்தின் பாஷைகள்....
கடந்து செல்வதா....!
இல்லை....!!!
உன்னை!
தொடர்ந்து செல்வதா....!

-


19 MAY 2019 AT 10:31

தொலைந்த நினைவுகளையும்...
தொலையப்போகும் நினைவுகளையும்...
தேடீக்கொண்டிருந்தது...
எனது...
நேற்று வந்த இரவு!!!

-


19 MAY 2019 AT 10:20

தமிழாகிய நான்!

முன் மொழி ஆகிய என்னை..
முன்மொழிய மறுத்தாய்!
உன் மொழி ஆகிய என்னை...
உரையாட மறுத்தாய்!
உதிரத்தில் என்னை...
நீ கலக்க மறந்தாய்!
மைல் கல்லில் கூட...
என்னை மரணமடைய செய்தாய்!
நான் வெறும் ஏட்டு மொழி இல்லை..
என்பதை...மறந்து...
என்னை எழுத மறுத்தாய்!
உயிர்பொன்னாக....காக்கவேண்டிய...
என்னை! வெறும் மதிப்பெண்ணாகவே....
பார்க்க தொடங்கிவிட்டாய்!!!
மற்ற மொழியார்க்கு...
புரிந்த என் அருமை!!!
என் பிள்ளைகளுக்கு...
புரியாதது...ஏனோ...!!!
மரணமில்லாத.....எனக்கு
மரணத்தை...தன்துவிடாதே!
நீ கரம் விட்டபோதும்...
நான் கரம் கொடுத்து நிர்ப்பேன்.
எனை அழிக்க சூழிச்சிகள்.....
ஏராலம் உண்டே...
எதுவகயினும்...ஏமாற்ந்து விடாதே...!
மரத்தமிழனென்றே.....
உனைப் போற்றிக் கொள்ளேன்!!!
புவி புதைந்த போதும்.,
நான் புரன்ட்டெழுந்து நிற்ப்பேன்...
தமிழாகிய நான்...தலைகனம் கொன்டவள்தான்🔥🔥...!!!

பா.தினகரன்















-


12 MAY 2019 AT 15:09

அம்மா

உன்னை கொண்டாட...
ஒரு நாளை ஒதுகிய இவர்களுக்கு...
தினம் உன்னை கொண்டாட வேண்டுமென்பதை... மறந்துவிட்டார்களோ!!!

உயிரை கொடுத்த உனக்கு...
ஒரு நாளை கொடுத்து...
ஒதுக்குவது சரியோ......!!!

அழுகும்போதெல்லாம்....
அம்மா என்று கத்தினேன்!
காரணம்....
என் வலிக்கான...மருந்தை
அறிந்தவள்.... நீ மட்டுமே.!!!

அம்மா என்ற சொல்லுக்கு
பேடன்ட்(காப்புரிமம்).....
போட்டுவிடாதே..... பிறகு
வார்த்தை அற்ற அகதி ஆகிவிடும் என் நாக்கு!!!😪😪

ஒற்றைச் சொல்லில்...
உலகை அடக்கச் சொன்னால்...
உன்னைச் சொல்லி...முடித்திடுவேனே
அம்மா என்று....!!!

-


3 MAY 2019 AT 17:22

குடும்பம் ஒருபுறம்...
நட்பு ஒருபுறம்...
காதல் ஒருபுறம்...
வேலை ஒருபுறம்...
வேகம் ஒருபுறம்...
வேதனை ஒருபுறம்...
இன்பம் ஒருபுறம்...
துன்பம் ஒருபுறம்...
உறவு ஒருபுறம்...
உணர்வு ஒருபுறம்...
இலட்சியம் ஒருபுறம்...
அலட்சியம் ஒருபுறம்...
உழைப்பு ஒருபுறம்...
ஊதியம் ஒருபுறம்...
ஆசை ஒருபுறம்...
அத்தியாவசியம் ஒருபுறம்...
ஆடம்பரம் ஒருபுறம்...
ஏழ்மை ஒருபுறம்...
அன்பு ஒருபுறம்...
அக்கறை ஒருபுறம்...
துரோகம் ஒருபுறம்...
தியாகம் ஒருபுறம்...
சூழிச்சி ஒருபுறம்...
சாட்சி ஒருபுறம்...
வெற்றி ஒருபுறம்...
தோல்வி ஒருபுறம்...
சமுகம் ஒருபுறம்...
சாதி ஒருபுறம்...
மதம் ஒருபுறம்...
மனிதர் ஒருபுறம்...
தண்ணீர் ஒருபுறம்...
தாகம் ஒருபுறம்..
ஆட்சி ஒருபுறம்...
அடிமை ஒருபுறம்...
அகிம்சை ஒருபுறம்...
வன்முறை ஒருபுறம்...
ஏமாற்றம் ஒருபுறம்...
ஏமாற்றியவர் ஒருபுறம்...
மாற்றம் ஒருபுறம்...
முன்னேற்றம் ஒருபுறம்...
கடைசியில்.........!!!
நானோ.. இந்த உலகில் எங்கோ ஒருபுறம்...
இவைகளோடும், இவைகளுக்காகவும்!!!


-


Fetching Dinakaran p Quotes