Dhineshbabu Perumal Samy   (Dariusdnu)
228 Followers · 64 Following

read more
Joined 25 October 2017


read more
Joined 25 October 2017

மயில் தன் தோகையை
அழகு படுத்துவதை தினமும்
காணும் பாக்கியம்
கிடைக்கப் பெற்றவன் நான்!

-



ஒரு நாளுக்கு ஓர் ஆயிரம் முறை மலரும் மலர்களைக் கண்டுவிட்டேன்.

ஆம், என்னவளின் விழிகள் தாம் அவை!

-



ஒரு நாளுக்கு ஓர் ஆயிரம் முறை மலரும் மலர்களைக் கண்டுவிட்டேன்.

ஆம், என்னவளின் விழிகள் தாம் அவை!

-


25 AUG AT 22:19

உண்மைக் காதல் பூமியில் இல்லை.

ஆம், உண்மைக் காதல்
பூமியில் இல்லை!

உண்மைக் காதல் இருக்கும் இடம்
தான் சொர்க்கமாய் மாறிவிடுகிறதே..!

-


24 AUG AT 22:01

சிறு கோபத்தை கூட கட்டுப்படுத்தத்
தெரியாதவன்(ள்) இன்று, மொத்த
கோபத்தையும் துறந்து நிற்கிறான்(ள்)
எதற்காகவும் அவளை(னை)
இழந்துவிடக் விடக் கூடாதென்று!

-


24 AUG AT 16:33

கோபத்தைக் குறையாகச் சொல்லும் எவருக்கும், ஏனோ அந்தக் கோபத்தின் காரணத்தை அறிய நேரம் இல்லை!

-


23 AUG AT 22:56

காதல் காரணங்கள் இல்லாமல் எப்படி கல்யாணம் செய்கிறாய் என்று கேட்பவர்களிடம் எப்படிச் சொல்வேன் காரணம் தேடி தேடி காதலித்துக் கொண்டே இருப்பது தான் கல்யாண வாழ்க்கையின் சுவாரசியம் என்று!

-


20 AUG AT 23:26

நம்பவில்லை நான்.

ஆம், அன்பே! கடவுள் கொடுக்க நினைக்கும் வரத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற கூற்றை நம்பவில்லை நான், அந்த வரமாய் நீ எனக்குக் கிடைக்கும் வரை.

-


19 AUG AT 23:16

என்னவளைக் கண்டதும் என் பிரபஞ்சமே நின்றுவிடும் என்பவர்களிடம் எப்படிச் சொல்வேன், என் பிரபஞ்சம் மட்டும் நிற்காது என்று...

ஆம், என் பிரபஞ்சமே அவள் தானே!

-


16 AUG AT 23:27

மேகங்களின் அழுகை மழை என்றால்,
மனங்களின் அழுகை தான்
காதல் என்பதோ?
கண்களின் சந்திப்பை விட,
கண்ணீரின் சந்திப்பில் பொங்கி
வருகிறதே மறைந்திருக்கும் இந்தப் பொல்லாத உண்மைக் காதல்!

-


Fetching Dhineshbabu Perumal Samy Quotes