என் ஒட்டு மொத்த
காதலையும் களவாடிவிட்டு,
என்னையும் காதல்
அகதியாக்கிவிட்டாள், என்னவள்!-
Authored 2 books, A 10 step guide to LinkedIn Personal Brandi... read more
கடிகாரத்தின் மணி முள்ளும், நொடி முள்ளாக மாறி விடுகிறது அன்பே, உன் அருகாமை என்ற வரம் எனக்கு கிடைக்கும் பொழுதெல்லாம்!
-
காதல் தெரியாது என்றேன், இதோ ஒழிந்து இருக்கிறதே என்று காட்டிவிட்டு எடுத்துச் செல்கிறாள், என்னவள்!
-
காதலிக்க தெரியாதவர்களை விட, ஒருவரின் காதலை வெளிக்கொண்டு வர வைக்க தெரியாதவர்களே அதிகம்!
-
கால் நூற்றாண்டுக்கு
முன்னே பூமியில் கால் பதித்து,
காலத்தின் வரமாக என் வாழ்வில் வந்து,
கால் வினாடியில் கடைக்கண் பார்வையால்
என் இதயத்தை அபகரித்த,
என் கனவு தேவதையே,
என் உயிரே, என் இதயம் கவர்ந்தவளே,
உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!-
ஓர் கவிதைக்காக கவிதை
எழுதி அதனை அந்த
கவிதையிடமே காட்டும்
பாக்கியம் பெற்றதால்
உணர்கிறேன் நானும் ஓர்
சிறந்த கவிஞன் என்று... அடடே!-
ஓர் ஆயிரம் மணி நேரங்களுக்கு
மேலும் உன் புகைப்படத்தைப்
பார்த்துக் கொண்டே இருந்த
பொழுதிலும். என் இனியவளே, உன்
அருகாமையை எண்ணி மட்டுமே என்
மனம் தவிக்கின்றது!-
மட்டுமே என் வாழ்க்கை
முழுவதும் அடங்கி உள்ளது
என்றே நினைத்துக்
கொண்டிருந்தேன் என்னவளே,
உன் ஒவ்வொரு அசைவிலும்
நான் உன் பாதியாகக் கலந்திருப்பதை உணரும் வரை!-
ரசிக்கும்பொழுது தான்
தெரிகிறது அவள்
என்னுள் விட்டுச் சென்றது
அவள் காதலை மட்டும்
அல்ல அவளையும் தான் என்று..!-
கண்டதும் காதல் என்ற
வித்தையில் நம்பிக்கை
இல்லை என்றிருந்தேன்.
என்னவளே உன்னை காணும்
ஒவ்வொரு முறையும்
காதலில் விழ தொடங்கும் வரை!-