கால் நூற்றாண்டுக்கு
முன்னே பூமியில் கால் பதித்து,
காலத்தின் வரமாக என் வாழ்வில் வந்து,
கால் வினாடியில் கடைக்கண் பார்வையால்
என் இதயத்தை அபகரித்த,
என் கனவு தேவதையே,
என் உயிரே, என் இதயம் கவர்ந்தவளே,
உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!-
Authored 2 books, A 10 step guide to LinkedIn Personal Brandi... read more
ஓர் கவிதைக்காக கவிதை
எழுதி அதனை அந்த
கவிதையிடமே காட்டும்
பாக்கியம் பெற்றதால்
உணர்கிறேன் நானும் ஓர்
சிறந்த கவிஞன் என்று... அடடே!-
ஓர் ஆயிரம் மணி நேரங்களுக்கு
மேலும் உன் புகைப்படத்தைப்
பார்த்துக் கொண்டே இருந்த
பொழுதிலும். என் இனியவளே, உன்
அருகாமையை எண்ணி மட்டுமே என்
மனம் தவிக்கின்றது!-
மட்டுமே என் வாழ்க்கை
முழுவதும் அடங்கி உள்ளது
என்றே நினைத்துக்
கொண்டிருந்தேன் என்னவளே,
உன் ஒவ்வொரு அசைவிலும்
நான் உன் பாதியாகக் கலந்திருப்பதை உணரும் வரை!-
ரசிக்கும்பொழுது தான்
தெரிகிறது அவள்
என்னுள் விட்டுச் சென்றது
அவள் காதலை மட்டும்
அல்ல அவளையும் தான் என்று..!-
கண்டதும் காதல் என்ற
வித்தையில் நம்பிக்கை
இல்லை என்றிருந்தேன்.
என்னவளே உன்னை காணும்
ஒவ்வொரு முறையும்
காதலில் விழ தொடங்கும் வரை!-
பிடிக்கவில்லை!
ஆம் மழையே, இத்தனை
வருடங்களாக என்னுடனே
விளையாடி திரிந்துவிட்டு,
இன்று எனக்கே நீ வஞ்சம்
செய்வது பிடிக்கவில்லை.-
மட்டுமே நான் அமைதி கொள்வேன்
என்று கூறிக் கொண்டிருந்த
என் இதயத்தை, உன் முதல் கடைக்கண்
பார்வையிலேயே உன்னுள் தஞ்சம்
அடைய வைத்த இந்த வித்தையை எங்கு
கற்றாய் அடி என்னவளே!-
சேர்ந்து இருப்போமா என்று
தெரியவில்லை, ஆனால்
சேர்ந்து இருக்கும் காலம் வரை
வாழ்ந்து கொண்டே இருப்போம்!-