இந்த truecaller app
என்பது வரமா? சாபமா?
நீ என்னை மறந்து விட்டாய்
என்று நான் உன்னை
மறக்க நினைக்கையில்
நீ எத்தனை முறை
என் எண்ணை
எடுத்துப் பார்க்கிறாய்
என்பதை இது காட்டிக்
கொடுத்து விடுகிறது.
இப்போது சொல்
நான் உன்னை
நினைப்தை மறப்பதா?
இல்லை உனைப் போலவே
நினைப்பதை மறைப்பதா?-
*பேனா முனையில் பெருங்காதல் கொண்டவள்.
*புத்த... read more
தயவுசெய்து,
நான் உன்னை நினைக்கும்
போதெல்லாம்
என்னை அழைத்து விடாதே!
என்னைக் கொஞ்சம்
உனக்காக ஏங்க விடு!
என்னைக் கொஞ்சம்
உனக்காகத் தவிக்க விடு!
என்னைக் கொஞ்சம் ஆழமாக
உன்னை பற்றி நினைக்க விடு!
அன்பென்பது அடிக்கடி
அழைப்பதில் இல்லை.
அன்பென்பது ஏக்கத்திற்குள்
உறைந்துள்ளது.
அன்பபென்பது தவிப்பில்
கரைகிறது.
அன்பென்பது நினைவில்
வழிந்தோடுகிறது.
உறைந்த அன்பு வழியும் வரை
என்னை அழைக்காதே.!
தயவுசெய்து,
நான் உன்னை நினைக்கும்
போதெல்லாம்
என்னை அழைத்து விடாதே!!!!!!!-
அன்பு எப்போதும்
காயப்படுத்தப்பட்டு
கொண்டே இருக்கும்.
அன்பு எப்போதும்
அவமதிக்கப்பட்டுக்
கொண்டே இருக்கும்.
அன்பு எப்போதும்
குறைத்தே மதிப்பிடப்படும்.
அன்பு எப்போதும்
ஏளனப்படுத்தப்பட்டுக்
கொண்டே இருக்கும்-ஆனால்
அன்பு ஒருநாள் நிச்சயம்
எல்லாவற்றையும் மாற்றும்
எல்லோரையும் மாற்றும்-
புதிய இடத்திற்கு
முதலில் நாம் கொஞ்சம்
பழகிக் கொள்ள வேண்டும்
பின்னர் அவ்விடத்தை நமக்கேற்பப்
பழக்கிக் கொள்ள வேண்டும்.-
எழுதாத வரிகளில் தான்
எத்தனை காதல்
எத்தனை ஆசை
எத்தனை ஏக்கம்
எத்தனை கோபம்
எத்தனை துனக
ஒளிந்திருக்கிறது.
-
உன்னை அடிக்கடி
நினைப்பதால் தான்
உன்னிடம் பேசவே
கூடாதென்று தோன்றுகிறது.
உன்னிடம் பேசவே
கூடாதென்று தோன்றுவதால் தான்
உடனே அழைத்துப் பேசுகின்றேன்.-
ஒரு புதுப் பள்ளி
பழகிப் போக
மாணவர்களின்
கண்களில் கசியும்
ஒரு துளி அன்பு,
உதட்டோரம் மிளிரும்
ஒற்றைப் புன்னகை,
உரிமையாய் கொள்ளும்
செல்லக் கோபம்,
தேடி வந்து
விடைபெற்றுச் செல்லும்
விளக்க முடியா நேசம்
இவை போதாதா?????-
Looking bright
someone for right.
You come in Night.
Being white.
Being a light in night.
You might.
If Someone fright in night,
By seeing you we have memory full nights.
The beauty of Universal Sky.
You have full attendance in earth's Sky.
Best friend of night's sky.
You may not lie.
Subhiksha D D-