உருகும் மெழுகாய் நீ!!
உயிர்த்தெழும் ஒளியாய் நான்!!!-
Interested in music,people n books...
Passion towards photography n drawing...
... read more
அந்திமாலை காற்றை ரசித்திருந்தேன்
சட்டென்று சூழ்ந்தன கருமேகங்கள்
ஆழிப்பேரலையில் சிக்கி
திணறிக் கொண்டிருந்தேன்
அரண் வேண்டி காத்திருந்தேன்
கரம் ஒன்று நீண்டது
பிரிவில்லை என்றே பிடித்திருந்தேன்
விழித்ததும் உணர்ந்தேன்
கண்டது கனவென்று
பிறகே அறிந்தேன்
பற்றியது தலையனையென்று😉😉-
இடைவேளை நீண்டு போகும்
உறவுகள் விலகிப் போகும்
இன்பமும் தொலைந்து போகும்
-
புகைப்படம் :
உறைந்த நிமிடங்கள் - அதுவோ
பேசும் பல கதைகள்
உணர்ச்சி கலவைகள் - என்றும்
எண்ணிலடங்கா நினைவுகள்
நித்திரைக் கனவுகள் - அனைத்தும்
வண்ணமயமானப் படங்கள்
-
எதிர்பார்க்கிறது :
கள்ளமில்லா அன்பை
வஞ்சகமில்லா பண்பை
தனக்கான தனி கவனிப்பை
பொறாமையில்லாப் பாராட்டை
ஆசைப்படும் சிறிய பொருட்களை
தொலையாமல் மறைந்து இருக்கும் குழந்தைத்தனத்தையுமே என்றென்றும்-
வழியும் கண்ணீரின் இடையே
சிலரால் தோன்றும்
புன்னகையும் அழகுதான்...
சிரிப்பின் இடையே
சிலருக்காக இமைத் தாண்டும்
ஆனந்தநீர்துளியும் அழகுதான்...-
நான் படைக்கும் பிரம்மனேனில்
பெண்மையை உணர்த்தும் மென்மையை ஆண் இடத்திலும்
ஆண்மையின் வலிமையை பெண் இடத்திலும்
திருத்தங்களாகச் செய்துப் படைத்திருப்பேன்-
உன் இதழோரப் புன்னகையில்
கண்ணாடியும் உன்னை காதலிக்கும்
So keep Smiling Always😊☺-
இருள் சூழ்ந்தாலும் கருவறையே
நம் முதல் காவல்
ஒளி இழந்தாலும் கல்லறையே
நம் இறுதி காவல்
இடையில்தான் அவை
தொலைந்து விட்டது போலும்
நம் பெண்களுக்கு🤔-