சுகி ஷர்மி   (✍︎கவிஞர் சுகிஷர்மி)
743 Followers · 810 Following

தாயவள் மடியில் தவழ்ந்த நாள்..27.09.1984
Joined 5 October 2019


தாயவள் மடியில் தவழ்ந்த நாள்..27.09.1984
Joined 5 October 2019

நடிப்பதற்கு தான்
அதிக
மெனக்கடல்கள்
தேவை....
நாமாக
இருப்பதற்கு அல்ல...❣️

-



எப்போதுமே
புத்திசாலித்தனமாயிருப்பதும்
ஒரு வகை முட்டாள் தனமே......

அவ்வப்போது
கொஞ்சம் முட்டாளாயிருங்கள்...!!

-



உணர்வுகள்
மறைக்கப்படாமல்
வெளிப்படும் வரையில் தான்
மனதின் இயல்பு
நிம்மதியாக இருக்கும்...

-



அதீதம் என்றுமே
ஆர்ப்பரிப்பது இல்லை
அமைதியை தான் தேடுகிறது

-



நீ இருக்கிறாய்


நானும்
இருக்கத்தான் செய்கிறேன்



காதல் கொண்ட "நாம்" எங்கே...??!!


-



விழுவதற்குள்
பிடித்துவிடுவார்கள் என்ற
நம்பிக்கையோடு வரும்
கண்ணீர்த்துளிகளை
ஏமாற்றிவிடாதே மனமே...!!

-



அவளை நான்
கவிதை என்றேன்!!







அவளோ என்னை
கிறுக்கன் என்றாள்..!!

-



எவ்வளவு நெருக்கத்திலும்
ஒழுக்கத்தின் நெறி
கற்பிக்கும் இவன்
பேரழகனே..!!

-



அவள் கவிதைகள் எழுதுவதில்லை
எனக்கு
கற்றுக் கொடுப்பதோடு சரி....!!

-



அப்படி என்ன நடந்து விட்டது

பிடித்தவர்கள் நம்மிடம் பேசாமல்
அவர்களுக்கு பிடித்ததை
செய்து கொண்டிருக்கிறார்கள்...

ஆனாலும்....
தூரமாய் இருந்து கொண்டு
நம்மை நினைத்துக்
கொண்டு தான் இருப்பார்கள்

அவ்வளவு தான்...

வேறெதுவும் நடக்கவில்லை

நிம்மதியாய் இரு மனமே...

-


Fetching சுகி ஷர்மி Quotes