நடிப்பதற்கு தான்
அதிக
மெனக்கடல்கள்
தேவை....
நாமாக
இருப்பதற்கு அல்ல...❣️-
சுகி ஷர்மி
(✍︎கவிஞர் சுகிஷர்மி)
743 Followers · 810 Following
தாயவள் மடியில் தவழ்ந்த நாள்..27.09.1984
Joined 5 October 2019
YESTERDAY AT 9:05
எப்போதுமே
புத்திசாலித்தனமாயிருப்பதும்
ஒரு வகை முட்டாள் தனமே......
அவ்வப்போது
கொஞ்சம் முட்டாளாயிருங்கள்...!!-
31 JUL AT 8:23
உணர்வுகள்
மறைக்கப்படாமல்
வெளிப்படும் வரையில் தான்
மனதின் இயல்பு
நிம்மதியாக இருக்கும்...-
29 JUL AT 8:53
நீ இருக்கிறாய்
நானும்
இருக்கத்தான் செய்கிறேன்
காதல் கொண்ட "நாம்" எங்கே...??!!
-
29 JUL AT 6:35
விழுவதற்குள்
பிடித்துவிடுவார்கள் என்ற
நம்பிக்கையோடு வரும்
கண்ணீர்த்துளிகளை
ஏமாற்றிவிடாதே மனமே...!!
-
23 JUL AT 22:25
அப்படி என்ன நடந்து விட்டது
பிடித்தவர்கள் நம்மிடம் பேசாமல்
அவர்களுக்கு பிடித்ததை
செய்து கொண்டிருக்கிறார்கள்...
ஆனாலும்....
தூரமாய் இருந்து கொண்டு
நம்மை நினைத்துக்
கொண்டு தான் இருப்பார்கள்
அவ்வளவு தான்...
வேறெதுவும் நடக்கவில்லை
நிம்மதியாய் இரு மனமே...
-