மறக்க வேண்டும்
இல்லை என்றால்
மன்னிக்க வேண்டும்-
எத்தனை ஆசைகளையும் கனவுகளையும் சுமந்த
சென்ற இதயங்கள் கருகிய காட்சி கலங்க வைக்கிறது..
அவரது ஆத்மாக்கள் சாந்தி அடையட்டும்!
-
நாவடக்கம் இல்லையெனில் நன்மதிப்பை இழப்பாய்!
நடக்க இருக்கும் நற்காரியமும்
புயலின் போது
நடுக்கடலில்
சிக்கிய
படகு போல தத்தளிக்கும்!
-
வருவதும் போவதும் விருந்தாளிகளுக்கு அழகு!
கரையை வந்து வந்து முத்தமிட்டு போவது அலைக்கு அழகு!-
இயங்கிக் கொண்டே இருப்பதும்
மாறிக்கொண்டே இருப்பதுதான்
உலக நியதி!
இதில் மனித மனமும் உட்பட்டதுதானே!
மாற்றத்தை
ஏற்புடையதாக்குவதில்தான்
இயக்கங்கள் மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது!
-
அன்பை விட மிக வலிமை வாய்ந்தது உண்மை!
அதிக மன மகிழ்ச்சி கொடுக்கக் கூடியதும் உண்மைதான்!
-
வரும்
துன்பங்களையும்
துயரங்களையும் கண்டு
துவண்டு விடாமல்
துடிப்புடனும்
துணிவுடனும்
துரத்திசெல்வதே
வெற்றியைத் தரும்!-