சோழனின் ராணி   (மதி✍️)
251 Followers · 335 Following

read more
Joined 10 June 2020


read more
Joined 10 June 2020

"காதல் என்னும் இவளின் கருவறையில் கருவாக ஒரு உயிர் பூத்தது...
"இவளின் காதலுக்கு அந்த உயிரின் மேல் கணக்கில்லா ஆசைகள்...
"உயிர் உறவாக,
"உற்ற துணையாக,
"தாங்கிடும் நிழலாக,
"தகப்பனின் பாதியாக,
"என் தாயுமானவனுமாக,
"யதார்த்தம் எடுத்து சொல்லும் நண்பனாக,
"உலகம் காட்டும் கண்ணாடியாக,
"சில நேரங்களில் முட்களாக,
"பல நேரங்களில் மருந்தாக,
"காயம் கொடுக்கும் வலியாக,
"கண்ணீர் துடைக்கும் கரமாக,
"அடம் பிடிக்கும் குழந்தையாக அவனும்,
"அவனை தேடும் குழந்தையாக நானும்,
என் அனைத்துமான ஆனந்தத்தை என் கருவறைக்குள் வைக்க நினைத்தேன்....
ஆனால் காலம் "என் கனவுகளின் நாடகமாக,எட்ட நின்று எட்டிப் பார்க்கும் கதையாக மட்டுமே நடத்துகின்றது...!!!!

-



பிரகாசமாக ஒளிரவும்
முடியாமல்,
முழுதாய் அணைத்து
விட்டு இருளிலும்
இருக்க முடியாமல்
இந்த
நினைவுகளின்
நிதர்சனம்...— % &

-



துயில் துளியும் துளிர்க்கவில்லை..
அவனின்றி என்னுள் அணுவும் அசையாதவளாய் தனித்த இரவின் தனிமையில் என்னவனை தேடியவளாய் ஒரு பேதை நான்..!!— % &

-



நிழல் போல நானும் நிஜம் போல நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்..!!
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே..!!

-



தனித்து நில்...
தளர்ந்து விடாதே...
முயற்சி செய்...
முடங்கி விடாதே..
சூழ்நிலை எதுவாயினும்
கடந்து போகக் கற்றுக் கொள்..
அடித்தாலும் வாங்கிக் கொள்..
அமைதியாய் கடந்து செல்..
உனக்கென்று ஓர் நாள் வரும் வரை..
உன்னை நீயே ஊக்கப்படுத்திக் கொள்ளும் ஆயுதமாக இரு...
நிராகரிக்கப்படும் இடங்களில் நன்றி கூறி விட்டு நகர்ந்து செல்..
எதுவும் சில காலம் என்ற எண்ணத்தை பழக்கப்படுத்திக் கொள்..
தனிமையை தோழமையாக ஏற்றுக்கொள்..
அங்கு உன்னை காயப்படுத்தவும் அதில் நீ கற்றுக்கொள்ளும் பாடம் போல் வேறு எதிலும் கற்று தேர்ந்திட முடியாது..
உன்னை உனக்கு அடையாளம் காட்டும் நிழற்கண்ணாடி தனிமை..
நிலையற்ற இவ்வுலகில் நிலையென்று ஒன்றும் இல்லை...!!!!

−மதி✍️

-



என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியும் என்ற நிகழ்காலத்தை ஏற்று கொண்டு அதை கடந்து செல்வதன் வலி நகர்கின்ற ஒவ்வொரு நகர்வுகளுக்கே தெரிந்த பாரம்..
எதையும் மாற்றியமைக்க முடியாத மானிடப்பிறவியில் சகித்து கொண்டு வாழ்ந்தப்படி..!!

-



இரு மனப்பறவைகளின் ஆசை என்னவோ இதுதான்..
ஆரவாரமில்லா இராத்திரியில் ஆசை நாயகன் அருகிலிருக்க வளையாத வானத்தையும் வளைத்து கதை கூறுவான் என் செவியோரம் கதைத்தப்படி..
அவன் கைகள் என் தோள் மீது உரிமைக் கொள்ள நெருக்கம்
கூடும் வேளைதனில்
அதீத காதலோடு ஆசை பார்வை பார்த்தப்படி அடங்காத இரவின் ரம்மியமான சூழ்நிலையில் தாபங்களின் தாகம் தீர தீரப் பற்றி எறிகின்ற நெருப்போடு பஞ்சணைக்குள் குளிர்காய்த்திவோமா அவனில் நானாக என்னுள் அவனாக..!!!

-



புதிய அனுபவத்தை
கற்று கொடுக்க
நல் விடியலாய்
விடிகிறது..

-



உன்னால்
இயற்றப்பட்ட
கவியாயினும்
உன் உதடுகளால்
இன்றுவரை
வாசிக்கப்படாத
எழுத்துகளின்
வாசகி இவள்..!!

-



ஏதோ ஒரு மாறுதலை தேடி உன்னில் நனைய வந்தேன்.முழுதாய் நனைந்தேன் முழுதாய் மறைக்க தெரியவில்லை என்னோடு சேர்ந்து என் கண்ணீர் துளிகளும் உன்னோடு கலந்து
என்னை நனைத்தது..
துளியளவு மாற்றமின்றி பாரங்கள் மட்டுமே மிஞ்சமாக..!!

-


Fetching சோழனின் ராணி Quotes