இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது . என்ன , நீ வெறுக்க துவங்கிவிட்டாய் , நான் இன்னும் அதீத காதலின் அபாயத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறேன்.... நீ விலகுவதால் முடிவு பெற்றுவிடுவதில்லை , நான் இருக்கிறேன் 'காதல் ' இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது ...!
அவள் தொலைத்துவிட்டு தேடுகிறாள் , நான் தொலைந்துபோன இடத்தையே தேடுகிறேன்.... இப்போது நிம்மதியாக தூங்குகிறாள் , அவள் தூங்குவதை நினைத்தபடியே விழித்திருக்கிறேன் நான் ! காதல் அந்நியோனியமானது , காதலி அவனகராதியில் அங்கீகரிக்கப்பட்டவள்.....!
கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக வெட்டப்படும் மரங்களின் வரிசையில் நானும் நிற்கிறேன் . என்னை அழிக்கும் பட்சத்தில் என் வேர் பயணித்த தடையங்களை எவ்வாறு அழிப்பீர் ? காதல் பூக்களும் அப்படித்தான் , கிளைகளில் மலர்ந்தாலும் வேர்களிலே வாழும் ! வெட்டுபவர்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும் , வேர்கள் அல்ல ....!