பெண் என்பவள்
ஊனும் உயிரும் கலந்த காவியம்
உணர்வுகளற்ற ஓவியம்
சந்ததிகள் சுமக்க
மலடாகிப் போனாள்
பாரம் சுமந்தே பழுதாகிப் போனாள்
கட்டிலுக்கும் தொட்டிலுக்கும்
சமையல் கட்டுக்குமாக
கடந்த அவளின் காலங்கள்
இப்பொழுதுதான் சிறகு விரித்து
சிந்திக்க துடிக்கிறது
அதற்குள் அவளை
போகப் பொருளாக்கும் காமக்கூட்டம்
காற்றை போல் எல்லா இடங்களிலும்
அவளை கடந்தே...... கடக்கிறது
வலி தாங்கி வந்தவள்
மீண்டும் வலி தாங்கியே
வலி தாங்கவே........
தன் பயணத்தை தொடர்கிறாள்........
புயலான
பூவின் பயணம்தான்
வெறும் புழுதிகளால்
இனி .........
............. நிற்காது........
சித்ரா நந்தலாலாவின்
மகளிர் தின வாழ்த்துக்கள்......
-