என் மெய் காதலை புறக்கணிக்க..
அவள் பொய் காதலை முன்வைத்தாள்..
மூன்றெழுத்தின் சொந்தக்காரி..-
மறக்காதே..
மறுக்காதே..
மறைக்காதே..
பார்வைக்கு எட்டும்..
தொலைவில் இருப்பவளின்..
பார்வைக்கு மட்டும்..
எட்டாதவன் நான்..-
கானல் என்று..
தெரிந்தும் ஏங்குகிறேன்..
அவன் அன்பிற்காக..-
நிறம் மாறும் பூக்களின் நடுவே..
நிறம் மாறாமல் இருங்கள்..
தனித்துவம் உங்களை..
பறித்து தலையில்..
சூடிக்கொள்ளும்..-
உருவமில்லாத சாதி என்னும் தராசில்..
உருகொண்ட மனிதன் தரம் பிறிக்கபடுகிறான்..
சாதியமெனும் இருளில் மூழ்கிய விழிகளுக்கு,
மனித நேயத்தின் ஒளி ஏன் புலப்படுவதில்லை?
காலங்கள் பல கடந்தும், மாறவில்லை மனிதன்,
மறையவில்லை சாதியின் நிழல்..
சிறு வயதில் விதைக்கப்படும் நஞ்சாகும் சாதி எண்ணம்..
இதை வேரறுக்க இன்று வரை கண்டுபிடிக்கவில்லை மருந்து தன்னம்..
சாதி பார்க்கும் மனிதா, உன்னுள் இருப்பது என்ன?
நீ மனித குலமா? இல்லை, நோயுற்ற மனமா?
சாதி என்னும் மாயையில் சிக்கித் தவிக்கும் மனிதா..
நீ வெறும் தோல் போர்த்திய எலும்புக் கூடு தானா?
பிறப்பின் அடையாளத்தை வைத்து ஒருவனை எடை போடும் நீ,
அவன் திறமையையும், குணத்தையும் ஏன் பார்ப்பதில்லை நீ?
சாதி என்னும் விலங்கை உடைத்து, வா மனிதா..
மனிதநேயம் என்னும் ஒளியில் ஒன்றிணைவோம் புதிதா!-
அவள் கண்களே ஆயிரம்..
கவிதைகள் சொல்லும்..
அந்த ஆயிரமும்..
அவள் கண்களையே பேசும்..-
அவனின் வருகைக்காக..
காத்திருகிறது..
வாடாத மலர் ஒன்று..
வாடிய மலருடன்..-
இவ்வுலகில் ஆசை..
இல்லாத மனிதன்..
இருந்தால் காட்டுங்கள்..
வாழ வேண்டும்..
என்ற ஆசை எப்படி..
வந்தது என்று கேட்க..
வேண்டும்..-
அழகை அள்ளி..
தெளித்த பிரம்மன்..
ரெண்டே ரெண்டு..
கண்ணை கொடுத்து..
கஞ்சத்தனத்தை..
காட்டி விட்டான்..-
நான் : காவல் நிலையத்தில்
உன் மீதி வழக்கு பதிவுகள்
குவிந்த வண்ணம் உள்ளன..
அவள் : ஏன்?
நான் : வீதியில் செல்லும் போது
பார்ப்பவர் இதயத்தை
திருடி செல்கிறாயாம்..
அவள் : 🫣..
நான் : பயப்படாதே என் இதயத்தை
மட்டும் திருப்பி கொடுத்து விடு..
யாரிடமும் சொல்ல மாட்டேன்.. 😁..
அவள் : 😊🤭..-