Bala Velayutham   (பாலவேலாயுதம்...✍️)
35 Followers · 68 Following

read more
Joined 4 January 2021


read more
Joined 4 January 2021
22 DEC 2024 AT 19:51

கையடக்க கைப்பேசியில் மறைத்த காதலை, உன் கண்பார்த்த நொடியில், கதைத்துவிட்டேன் கண்ணிரோடு...!

-


7 JUL 2024 AT 17:08

சத்தமில்லாமல் தன்னுள்
வைத்திருக்கும் பழைய புத்தகப்புதையலில்...!
பசுமையான பள்ளி நினைவுகளுடன்..!

-


29 APR 2024 AT 23:41

கடிகாரத்தை கையில் கட்டிக்கொண்டு
அனுதினம் அதைப்பார்த்து கொண்டிருந்தும்,
பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்...
நாமே காலத்தின் கையில் உருளும்
பிணையக்கைதியென...!

-


29 APR 2024 AT 19:30

கடிகாரத்தை கையில் கட்டிக்கொண்டு
அனுதினம் அதைப்பார்த்து கொண்டிருந்தும்,
பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்...
நாமே காலத்தின் கையில் உருளும்
பிணையக்கைதியென...!

-


28 APR 2024 AT 21:43

அன்று எழுதிய நாட்குறிப்புக்கள்...
இன்று எதையோ அவசரமாக தேடிகிற
போது அழகாக அகப்பட்டுவிட்டது...!

நேரம் கிடைக்கும் வார இறுதியில்
தனிமையாக போய்வருவோம் காலப்பயணம்...!

-


28 APR 2024 AT 21:22

அன்று எழுதிய நாட்குறிப்புக்கள்...
இன்று எதையோ அவசரமாக தேடிகிற
போது அழகாக அகப்பட்டுவிட்டது...!

நேரம் கிடைக்கும் வார இறுதியில்
தனிமையாக போய்வருவோம் காலப்பயணம்...!

-


24 APR 2024 AT 22:20

ஆழமாக உள்ளிழுத்து
மென்மையாக வெளியிடும்
மூச்சுக்காற்று உணர்த்திவிடும்
அதன் சுவாரசியத்தை...!

நீண்டகால தீராக் குழப்பத்திற்கும்,
சாலையோர வழிப்போக்கனைப்போல்,
சாதாரணமாய் ஆறுதல் சொல்லி
ஆசுவாசப்படுத்திவிடுகிறது
சன்னலோர தென்றல் காற்று...!




-


5 JAN 2024 AT 0:29

தோழியென அறிமுகமானவள்!
தேன்தமிழாய் தினமும் தித்தித்தவள்!
விடியலிலும், அடைதலிலும்
அமைதியாய் ஐக்கியமானவள்!
நண்பகலிலும் நண்பியாய்,
நலம் விரும்பியாய் தொடர்ந்தவள்!
ஒருநாள் ஒருபொழுதும்
அவளின்றி அணுவும் அசையாவண்ணம்
அதிகாரமாய் ஆர்ப்பரித்து அமர்ந்துவிட்டாள்
உடலின் ஒவ்வொரு செல்லிலும்!
உதிரமாய் ஓடுகிறாள்
ஓசையே இல்லாமல்!

-


1 JAN 2024 AT 23:05

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவரின்
அளப்பரிய வாழ்த்துகளுடன் தான் ஆரம்பிக்கிறது
ஆண்டின் முதல்நாள்!

எத்தனைமுறை விழுந்தாலும்
சலிக்காமல் எழுந்துவரும்
மழைலையின் மனம்போல
இம்முறையும் சொல்லுவோம்!

எண்ணிய யாவும் இனிதே ஈடேறும்

-


1 JAN 2024 AT 20:29

விவரம் தெரியாத வரை
கண்ணில் தென்படும்
சிவப்பு & வெள்ளை மட்டுமே
நிறமென நினைக்கிறது
பால்மனது!

இருளின் பக்கங்கள் ஒளிப்பட்டு
வெளிப்படும்போதே வலிக்கிறது
ஆழ்மனது!

-


Fetching Bala Velayutham Quotes