Azhagesan   (❤️avhr❤️...)
252 Followers · 192 Following

எதையும் தாங்கும் இதயம் கொண்டவன்,,

பொறுமை உள்ளவன்..

அஜித் ரசிகன் (வெறியன்)
Joined 18 December 2018


எதையும் தாங்கும் இதயம் கொண்டவன்,,

பொறுமை உள்ளவன்..

அஜித் ரசிகன் (வெறியன்)
Joined 18 December 2018
23 MAR AT 7:51

கனவு எல்லையின் ஏடுகள்
கண்டுகொள்ளாத இரவுகள்
கடக்க முடியாமல் நானும் தவிக்கிறேன்..

கைகள் கன்னத்தை தாங்கியவாறு
கடக்கிறது மீதமுள்ள பாதையை...

-


23 MAR AT 7:48

இளமை எங்க போகுதோ
உன்னை அல்ல ஏங்குதோ...

உறவுக்கார நாய்கள் எல்லாம்
உறவு கொண்டாட மோய்க்குதோ..

தனிமையில் தரையெல்லாம் ஈரமாகாது
தாகத்துக்கு என்ன அர்த்தம் என்று தேடுது

-


23 MAR AT 7:41

முத்தத்தில் ஏதேதோ
மொத்தத்தில் நாமும் இல்லை
நான்கு புறமும் சுற்றிப் பார்த்தேன்
காற்றும் நம்மை கற்பழித்தது...

-


23 MAR AT 7:38

கைகளில் நிரம்பிய உன் நினைவுகள்
குடித்தே கரைகிறது பொழுதுகள்
காயங்கள் மீண்டும் மீண்டும் உயிர்
பெறுவதற்குள் - நீ வா உயிராக!!!

-


22 MAR AT 20:58

காதல் போடும் தூறலே
இரவு நேர தொல்லையே...
கடந்து போக நினைத்தால்
நேரம் போகும் எல்லையே....

எண்ணத்தின் அலைகள் ஏற்றியே
ஆயிரம் ஒத்திகை தனிமையில் போகுதே

-


18 MAR AT 20:32

நினைவுகளின் எல்லையில் எட்டி
உதைக்கிறது அவன் துரோகத்தின்
துர்நாற்றம்...

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
சுயநினைவு இல்லாமல் -
சுழன்றுவிட்டது சொர்க்க வனம்...

பேச்சும் மூச்சும் இல்லாமல் பேய்
அடித்து அமர்ந்திருக்கிறேன் நிழல்
இல்லா காட்டில்...

காயங்களின் எல்லை
நிரப்பப்படுகிறது
கண்ணீரின் மிச்சத்தில்....

அவன் வைத்த முற்றுப்புள்ளியில்
தொடர்கிறேன் கேள்விக்குறியாக...

-


17 MAR AT 18:38

புத்தகங்கள் அழுக்கு படியும் வரை
விழிகளாலும் விரல்களாலும் வாசிப்பை
பெற்றுக் கொண்டே இருக்கும்....

நான் மட்டும் ஏன் வாசிக்கப்படாமல்
மலரின் வாசத்தோடு வாடி
போகிறேன் என்னவனே....

-


17 MAR AT 18:35

இருட்டுக்குள்ளே வெளிச்சம்
உள்ளது பெண் பூவே...

விடிய விடிய விழிகளுக்கு
விரதம் தானடி பெண் பூவே...

கொஞ்சி கொஞ்சி சாப்பிடுவோம்
கொலை கொலையாய் மாங்கனி
இதழால் வருடி மயங்கிடுவோம்...

-


9 MAR AT 8:39

உன் அருகாமை வாசனையில்
என் ஆளுமை அடங்கிட
அசைகிறதே காற்றின் வெப்பம்...

காதோர தலை முடி
தற்செயலாக அலையவில்லை
என்னில் - பல் வரிசைக்கு
தெரியும் பாதையின்
தொடக்கமும் முடிவும்....

-


3 MAR AT 5:34

உன்னை ஒவ்வொரு
வரிகளிலும் தேடுகிறேன்..

எழுத்துகள் சேர சேர
நானோ தேய்கிறேன்...

கண்களில் ஆயிரம்
கனவுகள் எனக்கு
உயிர் தராமல் போகும்
மாயம் என்னமோ...

-


Fetching Azhagesan Quotes