கனவு எல்லையின் ஏடுகள்
கண்டுகொள்ளாத இரவுகள்
கடக்க முடியாமல் நானும் தவிக்கிறேன்..
கைகள் கன்னத்தை தாங்கியவாறு
கடக்கிறது மீதமுள்ள பாதையை...
-
பொறுமை உள்ளவன்..
அஜித் ரசிகன் (வெறியன்)
இளமை எங்க போகுதோ
உன்னை அல்ல ஏங்குதோ...
உறவுக்கார நாய்கள் எல்லாம்
உறவு கொண்டாட மோய்க்குதோ..
தனிமையில் தரையெல்லாம் ஈரமாகாது
தாகத்துக்கு என்ன அர்த்தம் என்று தேடுது
-
முத்தத்தில் ஏதேதோ
மொத்தத்தில் நாமும் இல்லை
நான்கு புறமும் சுற்றிப் பார்த்தேன்
காற்றும் நம்மை கற்பழித்தது...
-
கைகளில் நிரம்பிய உன் நினைவுகள்
குடித்தே கரைகிறது பொழுதுகள்
காயங்கள் மீண்டும் மீண்டும் உயிர்
பெறுவதற்குள் - நீ வா உயிராக!!!-
காதல் போடும் தூறலே
இரவு நேர தொல்லையே...
கடந்து போக நினைத்தால்
நேரம் போகும் எல்லையே....
எண்ணத்தின் அலைகள் ஏற்றியே
ஆயிரம் ஒத்திகை தனிமையில் போகுதே-
நினைவுகளின் எல்லையில் எட்டி
உதைக்கிறது அவன் துரோகத்தின்
துர்நாற்றம்...
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
சுயநினைவு இல்லாமல் -
சுழன்றுவிட்டது சொர்க்க வனம்...
பேச்சும் மூச்சும் இல்லாமல் பேய்
அடித்து அமர்ந்திருக்கிறேன் நிழல்
இல்லா காட்டில்...
காயங்களின் எல்லை
நிரப்பப்படுகிறது
கண்ணீரின் மிச்சத்தில்....
அவன் வைத்த முற்றுப்புள்ளியில்
தொடர்கிறேன் கேள்விக்குறியாக...
-
புத்தகங்கள் அழுக்கு படியும் வரை
விழிகளாலும் விரல்களாலும் வாசிப்பை
பெற்றுக் கொண்டே இருக்கும்....
நான் மட்டும் ஏன் வாசிக்கப்படாமல்
மலரின் வாசத்தோடு வாடி
போகிறேன் என்னவனே....-
இருட்டுக்குள்ளே வெளிச்சம்
உள்ளது பெண் பூவே...
விடிய விடிய விழிகளுக்கு
விரதம் தானடி பெண் பூவே...
கொஞ்சி கொஞ்சி சாப்பிடுவோம்
கொலை கொலையாய் மாங்கனி
இதழால் வருடி மயங்கிடுவோம்...
-
உன் அருகாமை வாசனையில்
என் ஆளுமை அடங்கிட
அசைகிறதே காற்றின் வெப்பம்...
காதோர தலை முடி
தற்செயலாக அலையவில்லை
என்னில் - பல் வரிசைக்கு
தெரியும் பாதையின்
தொடக்கமும் முடிவும்....-
உன்னை ஒவ்வொரு
வரிகளிலும் தேடுகிறேன்..
எழுத்துகள் சேர சேர
நானோ தேய்கிறேன்...
கண்களில் ஆயிரம்
கனவுகள் எனக்கு
உயிர் தராமல் போகும்
மாயம் என்னமோ...-