பொன் பொருள் வேண்டி
உன் திருக் கோவில் தனில்
தன் நிலை மாற
கண் மூடி கை கூப்பும் மானுடர்க்கு
வேண்டா வரம் ஒன்றும் கிட்டும்
மறதி என்னும் மாயை!
ஆம், பின் வரம் அளித்த
உன்னையும் மறக்கச் செய்யும்!
மாயம் அடையச் செய் மறதியை,
காயம் அடையாதிருப்பாய் நீ-
Arvind Uma
(arvind)
0 Followers · 1 Following
Joined 16 September 2021
12 JAN 2022 AT 11:05
26 OCT 2021 AT 23:30
எந்தையின் விந்தில் வந்த என்னையும்
தன் கையால் வளர்த்து சொந்த மகன் போல
அன்பெனும் விதை விதைத்தாள்
தந்தையின் தமக்கை..
விதையின் கனியே இன்று விதையின் சான்றாயிற்று!
விதைத்தவள் புதைபட்டாயினும்,
புதைத்தது விதை ஆயிற்றதால்,
உன் சதை மட்டுமே அழிந்தது, உன் விதை
இக்கவிதை...
உன் சிரிப்பு-அடங்கா வரம் ஒன்று கேட்டேன், தன் சிரிப்பிற்காக
உன் இறப்பை அரங்கேற்றினான்
இறைவன்.
வரம் கேட்டது இறைவனிடம்,
வரம் கிட்டியதும் அவனுக்கே...-
9 OCT 2021 AT 14:29
Lets go with the flow,
like brigantine on the shore,
after all, a show!-