மயான அமைதியும் கூட
அழகாக இருக்கும்
பிறரால் துன்புறுகையில்-
என் நெஞ்சுக்குழியைத் தொடும்
உன் தாலிதான்
என்னை உன்னோடு வாழவைப்பதாக
எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால்
என் இரங்கும் குணம் தான்
உன் அராஜகங்கள் அனைத்தையும்
தாங்கிக் கொண்டிருக்கிறது
என்பது
உனக்கும் எனக்குமே தெரிந்த
உண்மை..
-
மேக்கப் போட்டா
வயசு கம்மியா தெரியுதாம்
காதல் கவிதை எழுதினால்
மனசு இளமையா தெரியுதாம்
ஓஓ மை கடவுளே
தெரியுது என்பதை மாற்றி
அப்படியே வாழ ஏது வழி சொல்வாயோ😂😂😂-
என்றாவது நீங்கள்
யாரேரினதும் மனதை/ உணர்வை உணர்ந்துள்ளீர்களா
உணர்ந்தீர்களானால்
அது ❤️🙏-
பேசும்போது இரட்டை அர்த்த வசனங்களிலும்
பதிவிடும் போது பெண்களின் அங்கங்களையும்
அவர்களைப்பற்றி இழிவாகவும் பதிவிடாதீர்கள்.
காரணம் ஒன்றுமில்லை...
நான்(ங்கள்) உங்களை பிள்ளையாகவோ உடன் பிறப்பாகவோ எண்ணினால் அது உங்களுக்கே
அசிங்கம் என்பதனால் தான்-
என்னால் தான் உன்னவள் தாலி இறங்கியதாக ஊரார் திட்டுகிறார்கள். அவள் காதில் கிடந்த ஒரு பொட்டு நகையைக் கூட நீ விட்டு வைக்கலையாமே..!
ஆடை அலங்கோலமாக நீ தெருக்கோலமாக கிடந்ததற்காக என்னை அல்லவா திட்டுகிறார்கள்
🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃-
எந்தக்கயிறும் வேண்டாம்
என்னை புரிந்து கொண்டால்
நீ தூக்குக் கயிற்றில் ஏறச்சொன்னாலும்
ஏறுவேன் என்னவனே உனக்காக-
நிம்மதி....
அரக்கப்பரக்க ஓடி ஓடி
வேலை பார்த்தும்
என்ன தான் பிரயோசனம்
கையில் இருப்பு இல்லை
மாதக் கடைசியில்
நாக்கு தொங்குது முழி பிதுங்குது
என அழுபவர்கள் தான் அதிகம்
அடுத்தவர்களைப் பார்த்து பார்த்து
வாழத் தொடங்குவதால் தான்
இத்தனை பிரச்சனைகள்
நிம்மதி தொலைந்து போச்சு..
-